எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது

இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின்போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார்.

இந்தியாவில் வளர்ந்துவரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்துவருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டுவருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராகபோராட இருநாடுகளும் இணைந்துள்ளன.

கடந்த சிலமாதங்களாக, டென்மார்க் நிறுவனங்களான எல்.எம். விண்ட், ஹால்டோர் டாப்சோ மற்றும் நோவோசைம்ஸ் போன்றவை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்திபிரிவுகளை அமைக்க உறுதியளித்துள்ளன.

மற்றொரு பெரியடென்மார்க் நிறுவனமான மெர்ஸ்க், இந்தியாவில் உள்ள அனைத்து ஷிப்பிங் கண்டெய்ணர்களிலும் கிட்டத்தட்ட 19 சதவீதத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில், டென்மார்க்கின் டான்ஃபோஸ் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் விளைபொருட்களுக்கு குளிர் பதனக் கிடங்குகளை அமைத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சி மாநாடு ஆன்லைன் வாயிலாக நடக்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதன் படி பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் ஆன்லைன் வாயிலாக சந்தித்துபேசினர். கொரோனா காரணமாக இருதரப்பும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.

 

பேசும் போது எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்றார். சீனா தான் உலகிற்க மருந்து உள்பட பலமுக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்றநாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருவதாகவும், இந்தியாவைபோன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்.” என்றும் டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...