ஸ்வா நிதி திட்டத்தின் கீழ் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் 

பிரதமரின் நடைபாதை வியாபாரிகள்  தற்சார்புநிதி( ஸ்வா நிதி) திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இணையதளம் இடையே ஏபிஐ ( Application Programming Interface ) ஒருங்கிணைப்பை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர், துர்கா சங்கர் தொடங்கிவைத்தார்.   இதன் மூலம் பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இ-முத்ராஇணையதளம் இடையே, தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும, விரைவாகவும்  ஒப்புதல் அளிக்கமுடியும். இது தொழில் முதலீடுகடன் கோரும் நடைபாதை வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  இதேபோல் மற்றவங்கிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது

குறித்து மத்திய அரசு  ஆலோசித்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் விரைவில் நடக்கவுள்ளன.

கொவிட்-19 முடக்கம்காரணமாக பாதிக்கப்ட்ட நடைபாதை வியாபாரிகளுக்காக, பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கப் பட்டது.  இத்திட்டம் மூலம் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பயனடைய  இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  இதன்மூலம் நடைபாதை வியாபாரி, ரூ.10 ஆயிரம் தொழில் முதலீட்டு கடன்பெற்று, அதை மாத தவணையாக ஒராண்டுக்குள் திருப்பிச் செலுத்த முடியும்.  சரியானநேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7 %  வட்டி மானியம் பயனாளிகளின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கடனை முன் கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. மாததவனையை டிஜிட்டல் மூலமாக செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.1,200 வரை பணம் திரும்ப கிடைக்கும்.

பிரதமரின் ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், கடந்த 6ம் தேதி வரை, 20.50 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2.40 லட்சம் கடன்கள்  வழங்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...