கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சொத்துரிமை ஆவண அட்டை

கிராமங்களில் வசிக்கும்மக்களுக்கு, சொத்துரிமை ஆவண அட்டை வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்த பிரதமர் மோடி, ”பல ஆண்டுகளாக தாங்கள் வசித்துவந்த இடத்துக்கான சொத்துரிமை ஆவணம் கிடைப்பதும், நம்நாடு சுயசார்பு நிலையை எட்டுவதற்கான ஒருவழியே,” என, குறிப்பிட்டார்.

கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், சொத்துரிமை ஆவண அட்டை அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதன்படி, நாடுமுழுதும், 763 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, நிலஉரிமை ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன. ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: நம் கிராமங்களில் புதியமறுமலர்ச்சியை ஏற்படுத்தும், ஒருவரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது. உலகெங்கும், மூன்றில் ஒருபங்கு மக்களிடம் மட்டுமே, தங்கள் வசிப்பிடம் குறித்த உரிய ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் சொத்துக்கான உரிமை ஆவணம் கிடைப்பதால், கிராமங்களில் புதியமாற்றங்கள் ஏற்படும்.

கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னம்பிக்கையை பெறுவதுடன், சுயசார்பு நிலையையும் எட்டமுடியும். நில ஆவணங்கள் மூலம், வங்கிகளில் இருந்து கடன்களைபெற்று, சுயதொழில் செய்யும்வாய்ப்பு, அவர்களுக்கு கிடைக்கும். இது, நம்நாடு சுயசார்பு நிலையை எட்டுவதற்கான ஒருவழியாக அமையும்.

அடுத்த, நான்கு ஆண்டுகளுக்குள், நாடுமுழுதும் இந்த திட்டத்தின் வாயிலாக, அனைத்து வீடுகளுக்கும் உரியஆவணம் கிடைப்பதை உறுதிசெய்வோம். கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். முந்தைய, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள், ஆறுஆண்டுகளில் செய்துள்ளோம்.

முந்தைய ஆட்சியாளர்களுக்கு, கிராமங்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. விவசாயிகள், கிராமவாசிகள், சுய சார்புடன் இருப்பது, அவர்களுக்கு பிடிக்கவில்லை.தற்போது, விவசாயிகளுக்கு பல்வேறுசலுகைகள், மானியங்களை, நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்துகிறோம்.

ஏமாற்றி பிழைப்பு நடத்திவந்த புரோக்கர்கள், விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக, பொய்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராமங்களில் பிரச்னைகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அரசியல் செய்யமுடியும் என நினைக்கின்றனர். அரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை செய்துவருகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

‘ஸ்வமித்வா’ திட்டம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, அவர்களது வீடு மற்றும் வீடு அமைந்துள்ள சொத்து உரிமையை அளிக்கும் வகையில், ஸ்வமித்வா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஏப்., மாதத்தில் அறிவித்தார். நாடு முழுதும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, பிரதமர் பங்கேற்ற விழாவின் வாயிலாக, ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன. அதன்படி, 763 கிராமங்களைச் சேர்ந்த, 1.32 லட்சம் பேருக்கு ஆவண அட்டை வழங்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும், 6.62 லட்சம் கிராமங்களில், வரும், 2024ம் ஆண்டுக்குள் இந்த ஆவண அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், கிராம மக்கள், வங்கிக் கடன் வசதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...