இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.
பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. மேலும் இரண்டு கட்டங்களாக (3 மற்றும் 10 ம் தேதிகளில்) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ம் தேதி நடக்கிறது. இதனிடையே பீகாரில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி பேசியதாவது: மத்திய , மாநிலத்தில் ஒரேகூட்டணி ஆட்சியாக இரட்டை என்ஜினாக செயல் படும் தேசிய ஜனநாய கட்சிக்கும் பீகாரில் இரண்டு இளவரசர்களுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.
இளவரசர்களில் ஒருவர் உ.பி.,மாநிலத்தில் ஒருகூட்டணியை உருவாக்கினார். ஆனால் அங்கு கூட்டணி துடைத்து எறியப் பட்டது என ராகுலை பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டினார். அந்த இளவரசர் தற்போது பீகாரில் முகாமிட்டுள்ளார். இவர் பீகார் இளவரசருக்கு ஆதரவை கொடுத்துள்ளார். மறுபுறம் மாநிலத்ததை இருளில் இருந்து வெளியேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி உள்ளது என மோடி கூறினார்
மேலும் அஜீரணக்கோளாறு, வாந்தி போன்றவற்றை உருவாக்கிய உணவை போன்று எதிர்கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது என்றார். தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்தம் , காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அயோத்தியில் ராமர் கோவில்,பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்டவற்றில் எதிர்கட்சிகளின் நிலை குறித்தும் பிரதமர் பேசினார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |