இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்ற என்ஜின்களுக்கும் இடையே போட்டி

இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.

பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. மேலும் இரண்டு கட்டங்களாக (3 மற்றும் 10 ம் தேதிகளில்) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ம் தேதி நடக்கிறது. இதனிடையே பீகாரில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி பேசியதாவது: மத்திய , மாநிலத்தில் ஒரேகூட்டணி ஆட்சியாக இரட்டை என்ஜினாக செயல் படும் தேசிய ஜனநாய கட்சிக்கும் பீகாரில் இரண்டு இளவரசர்களுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.

இளவரசர்களில் ஒருவர் உ.பி.,மாநிலத்தில் ஒருகூட்டணியை உருவாக்கினார். ஆனால் அங்கு கூட்டணி துடைத்து எறியப் பட்டது என ராகுலை பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டினார். அந்த இளவரசர் தற்போது பீகாரில் முகாமிட்டுள்ளார். இவர் பீகார் இளவரசருக்கு ஆதரவை கொடுத்துள்ளார். மறுபுறம் மாநிலத்ததை இருளில் இருந்து வெளியேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி உள்ளது என மோடி கூறினார்

மேலும் அஜீரணக்கோளாறு, வாந்தி போன்றவற்றை உருவாக்கிய உணவை போன்று எதிர்கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது என்றார். தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்தம் , காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அயோத்தியில் ராமர் கோவில்,பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்டவற்றில் எதிர்கட்சிகளின் நிலை குறித்தும் பிரதமர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...