அர்னாப் கோஸ்வாமி கைது தலைவர்கள் கண்டனம்

52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பைபோலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தரவேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தன்னை மும்பைபோலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார்தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி’ ஒளிபரப்பியது.

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம்தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசும், அதன் கூட்டணிகட்சியும் மற்றொரு முறை ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் ‛ரிபப்ளிக் டிவி’ மீது மாநிலஅரசு எடுத்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல். இது அவசர நிலையை பிரதிபலிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அர்னாப் கைதுசெய்யப்பட்டது, பத்திரிகை சுதந்திரம்மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. மஹாராஷ்டிராவி் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மத்திய ரவி சங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அர்னாப் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, தேவையற்றது. கவலை தரும் விஷயம். 1975 அவசர நிலையை எதிர்ப்பதுடன், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். பத்திரிகைசுதந்திரத்தை நசுக்கும் மஹாராஷ்டிரா அரசின் செயலை கண்டு, காங்கிரஸ் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.