அர்னாப் கோஸ்வாமி கைது தலைவர்கள் கண்டனம்

52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பைபோலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தரவேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தன்னை மும்பைபோலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார்தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி’ ஒளிபரப்பியது.

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம்தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசும், அதன் கூட்டணிகட்சியும் மற்றொரு முறை ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் ‛ரிபப்ளிக் டிவி’ மீது மாநிலஅரசு எடுத்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல். இது அவசர நிலையை பிரதிபலிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அர்னாப் கைதுசெய்யப்பட்டது, பத்திரிகை சுதந்திரம்மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. மஹாராஷ்டிராவி் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மத்திய ரவி சங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அர்னாப் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, தேவையற்றது. கவலை தரும் விஷயம். 1975 அவசர நிலையை எதிர்ப்பதுடன், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். பத்திரிகைசுதந்திரத்தை நசுக்கும் மஹாராஷ்டிரா அரசின் செயலை கண்டு, காங்கிரஸ் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...