அர்னாப் கோஸ்வாமி கைது தலைவர்கள் கண்டனம்

52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பைபோலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தரவேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தன்னை மும்பைபோலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார்தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி’ ஒளிபரப்பியது.

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம்தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசும், அதன் கூட்டணிகட்சியும் மற்றொரு முறை ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் ‛ரிபப்ளிக் டிவி’ மீது மாநிலஅரசு எடுத்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல். இது அவசர நிலையை பிரதிபலிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அர்னாப் கைதுசெய்யப்பட்டது, பத்திரிகை சுதந்திரம்மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. மஹாராஷ்டிராவி் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மத்திய ரவி சங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அர்னாப் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, தேவையற்றது. கவலை தரும் விஷயம். 1975 அவசர நிலையை எதிர்ப்பதுடன், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். பத்திரிகைசுதந்திரத்தை நசுக்கும் மஹாராஷ்டிரா அரசின் செயலை கண்டு, காங்கிரஸ் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...