5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும்

மோடியின் ஆட்சி மேற்குவங்கத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், பாஜக ஆட்சியமைக்கும், 5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறினார்.

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று பாஜக சூளுரைத்துத் திட்டம்தீட்டி செயல்பட்டு வருகிறது. அதேசமயம் முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு கடும் போட்டியளித்து வருகிறது.

இந்தச்சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாட்கள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 200 இடங்களை கைபற்றி ஆட்சியமைக்கும். இது நாங்கள் புன்னகைசெய்யும் நேரம். ஏனெனில் மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்குவருகிறது.

மோடியின் ஆட்சி மேற்குவங்க மாநிலத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிதிட்டங்கள் நிறைவேற ஆதரவு தர வேண்டும்.

காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இதுவரை வாய்ப்பு கொடுத்த மேற்குவங்க மக்கள் இந்தமுறை பாஜகவுக்கு வாய்ப்பு தர வேண்டும். வங்கம் இழந்த பெருமையை மீட்டெடுக்கும். 5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும்.

வாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் நடக்கும்போர் இந்த தேர்தல். ஊருவல் காரர்களிடம் இருந்து வங்கத்தை மீட்டெடுப்போம்.

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கொல்ல படுகின்றனர். கடந்த ஓராண்டில் பாஜக தொண்டர்கள் 100 பேர் கொல்ல பட்டுள்ளனர். வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு காட்டாச்சி நடைபெறுகிறது.

மம்தா பானர்ஜியின் அரசு மீது மேற்குவங்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் பாஜகவை இன்முகத்துடன் வரவேற்க தயாராக உள்ளனர்.’’ என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...