திருமணத் தடையை நீக்கும் மயிலாப்பூர் மல்லீஸ்வரர்

சென்னையில் காஷ்யபர், அகஸ்தியர், பிருகு போன்ற பல முனிவர்கள் வழிபட்ட சில முக்கியமான சிவஸ்தலங்கள் உண்டு. அந்த காலத்தில் இந்த இடம் தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டதாம். மேலும் இங்குதான் சிவபெருமானிடம் பல முக்கியமான புராண நாயகர்கள் அருள் பெற்ற பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

மயிலாப்பூர்  மல்லீஸ்வர ஆலய வரலாறு

ஒரு முறை சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார். பலமுறை பல்வேறு ரூபங்களிலும் அவதாரங்களிலும் சாப விமோசனம் அடைந்த பார்வதியை சிவபெருமான் மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் மணந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் ஆனவுடன் இப்Nபுhது ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கினார்கள். பார்வதி தேவி தனக்கு மல்லிகைப் பூ மிகவும் பிடிக்கும் எனக் கூறியதினால் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கினாராம். அந்த இடம் அந்த காலத்தில் மூழுவதும் மல்லிகை மலர்களைக் கொண்ட காடாகவே இருந்தது. அவள்; தினமும் மல்லிகைப் பூக்களினால் ஆன மாலையை அணிந்து கொண்டு சிவபெருமான் முன் நின்று நடனம் ஆடுவாளாம். ஆகவே அவளை மல்லீஸ்வரி என அழைத்தாராம்.

அப்போது அயோத்தியாவில் பிரதான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகளுக்கு வெகு காலம் திருமணம் ஆகவில்லை. ஆகவே அவன் பிருகு முனிவருடைய அறிவுறையை ஏற்று மல்லீஸ்வரர் உள்ள இந்த இடத்திற்கு வந்து நாக தோஷத்தை விலக்கி அவளுக்கு திருமணத் தடையை விலக்க வேண்டும் என சிவபெருமானைத் துதித்தபடி கடுமையான தவத்தில் இருந்தார். அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் தமது மனைவியான பார்வதியுடன் காட்சி அளித்து அவருக்கு அருள் புரிய அந்த மன்னனின்; மகளுக்கு திருமண பாக்கியம் கிடைத்ததாம்;.

அது முதல் திருமணத் தடையிருந்தவர்கள் லிங்க உருவில் அங்கு இருந்த மல்லீஸ்வரர்களை (சிவன் -பார்வதி) வந்து வழிபட்டு திருமணத் தடைகளை விலக்கிக் கொண்டனர். அந்த ஆலயத்திற்கு திங்கள் கிழமை சென்று மல்லிகை மாலைப் போட்டு ஆறு திங்கள் கிழமைகள் மல்லீஸ்வரரை வணங்கினால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை துவங்கியது. வெகு காலத்துக்குப் பின்னர் அங்கு ஆலயம் அமைந்ததாம். மல்லீஸ்வரி என்கின்ற பார்வதியுடன் ஈசன் சேர்ந்து அங்கு இருந்ததினால் இருவர் பெயரையும் கொண்டு மல்லீஸ்வரி ஈசன் என்ற பெயர் ஏற்பட அதுவே மல்லீஸ்வரர் என பிற்காலத்தில் மருவியதாம். ஆனால் ஆலயம் அமைக்கப்பட்ட கால விவரம் தெரியவில்லை.

Tags; திருமணத் தடையை நீக்கும்  மயிலாப்பூர்  மல்லீஸ்வரர், திருமண தடை நீங்க , திருமண தோஷம் நிவர்த்தி

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...