மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும்

மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும் என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இரவு வரை, டெல்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக கூறியுள்ளோம், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதைசந்தேகிப்பது ஆதாரமற்றது. இன்னும்கூட, சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசு தயாராக உள்ளது.

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும், அரசுபரிசீலிக்கும் என்று நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாயிகளின் தலைவர்களிடமிருந்து இந்தபிரச்சினைக்கு பரிந்துரைகள் கிடைத்தால் தீர்வுகாண்பது எங்களுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் பரிந்துரைகள் தரவில்லை.

கோவிட் மற்றும் குளிரான வானிலையை கருத்தில்கொண்டு, வயதானவர்களையும் குழந்தைகளையும், போராட்ட களத்திலிருந்து, வீட்டிற்கு திருப்பிஅனுப்புமாறு விவசாய தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமர் மோடியின் தலைமையில், பலவிவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையைகூட அதிகரித்துள்ளோம்.

மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும். போராட்டத்தில் கட்டுக்கோப்பை பேணியதற்காக விவசாயிகள் சங்கங்களுக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன். இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 9ம் தேதிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...