இந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசிதிட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப் படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன் சீரம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதை ஏற்று தலைமை மருந்துகட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்ட்(சீரம்) மற்றும் கோவாக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு நேற்று அனுமதி அளித்து. இதையடுத்து இந்தியாவில் தடுப்பூசிவழங்கும் பணிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நேஷனல் மெட்ரோலஜி கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிகாட்சி வாயிலாகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது.

இதற்காக, உழைத்த அனைத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைக்கண்டு, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.

மேட் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதை மட்டுமின்றி, அவை உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

எண்ணிக்கைகளை போலவே தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியா திட்டத்தில் நமதுபயணத்தில் எண்ணிக்கைகளோடு சேர்ந்து நமது தயாரிப்புகளின் தரமும் உயர வேண்டும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...