பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் பேச்சு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:

“பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பிரதமர் மோடிக்கு நன்றிதெரிவித்தார். அதேசமயம் பிரிட்டனில் நிலவும் கரோனா சூழல் காரணமாக குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்தியா வருவதற்கான ஆர்வத்தினை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டனில் நிலவும் தவிர்க்கமுடியாத சூழலைப் புரிந்துகொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் , பிரிட்டனில் பரவும் பெருந்தொற்றை விரைவில் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்தார்.”

முன்னதாக, பிரிட்டனில் பரவும் புதியவகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...