மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விவசாயிகள் டிராக்டர்பேரணி நடத்துவது சரியல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகளின் டிராக்டர்பேரணி குறித்து பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் கூறுகையில்,
‘மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்போது விவசாயிகள் எந்தவொரு இயக்கத்திற்கும் அழைப்புவிடுப்பது சரியானதல்ல. மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை(ஜன.8) நடைபெறவுள்ளது. அதுவரை விவசாயிகள் காத்திருக்கவேண்டும்.
கடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நேர்மையாக சுமூகமாக முடிந்துள்ளன. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
மேலும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியவர், ‘பாரத் ரத்னாவை காங்கிரஸ் தனது பதவிக்காலத்தில் தகுதியுள்ள பலநபர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் இப்போது அதேவிருதை காங்கிரஸார் சோனியா காந்திக்காக கோரியுள்ளனர் என்று தெரிவித்தார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |