இப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்

பிரதமர் நரேந்திரமோடி கோவிட் -19 தொற்று நோயை நன்கு கையாண்டார் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அவரது மதிப்பு பலமடங்கு பெருகி உள்ளது. இப்போது இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படுமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும் என்று ஜனவரி 2021 பதிப்பின்படி இந்தியா டுடே குழுமம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்களில் வெற்றிபெறக் கூடும் என்றும் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. தேசத்தின் மனநிலை (Mood Of the Nation) என்ற தலைப்பில் நடத்திய அந்த ஆய்வில், ஜனவரி 3-ம் தேதி முதல் 13-ம்தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்டவிதம் எப்படி? என்கிற கேள்விக்கு, 73% மக்கள் மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக வாக்களித்துள்ள்னர். கொரோனா ஊரடங்குகாலத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, 70% மக்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை குறை சொல்ல வில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு..? என்கிற கேள்விக்கு ‘85% மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்பு’’ என பதிவாகி இருக்கிறது. கொரோனா கட்டுப் படுத்துதலில் பிறநாடுகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்கிற கேள்விக்கு, ஆஸ்திரேலியா -94% பேர் நன்றாக செயல் பட்டது. ஜெர்மனி -88% நன்றாக செயல் பட்டது. இந்தியா -73% சிறப்பாக செயல் பட்டது என பதிலளித்துள்ளனர்

கொரோனாவுக்கான சிகிச்சை எங்குதரமாக கிடைக்கிறது? என்பதற்கு, 61% பேர் அரசு மருத்துவமனை ஆப்ஷனை தேர்வுசெய்துள்ளார்கள். கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பமா? என்கிற கேள்விக்கு, 76% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். இன்றையதேதியில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்கிறகேள்விக்கு, ‘’43 % பேர் தேசிய ஜனநாயக கூட்டனிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளனர். அதன்படி தேசியஜனநாயக கூட்டணி 321 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

27% பேர் மட்டுமே யு.பி.ஏ. கூட்டணிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளதால் காங்கிரஸ்கூட்டணி 93 இடங்கள் வெல்லவாய்ப்பு இருக்கும் என அந்தசர்வே கூறுகிறது. 30% பேர் இதர மாநில கட்சிகளை தேர்வுசெய்துள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 44% பேர் நன்றாக உள்ளது என பதில் அளித்துள்ளனர். 30% பேர் மிகச் சிறப்பு என்றும் 17% பேர் சராசரியாக செயல்படுகிறார் எனவும் 6% பேர் மிகமோசம் என பதில் அளித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...