நேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி

சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி, ”இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனாவுக்கான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி உதவுவதை பார்த்து, பெருமைப் பட்டிருப்பார்,” என, குறிப்பிட்டார்.

மேற்குவங்கத்தில்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த நாள்விழா கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடந்தது. பிரதமர் மோடியும், முதல்வர் மம்தாவும் நீண்டநாளுக்குப்பின் ஒரேவிழாவில் இப்போதுதான் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு, தற்சார்பு நிலையை எட்டுவதை எந்தசக்தியாலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும், நாம்வழங்கி உதவுவதை பார்த்து பெருமைப் பட்டிருப்பார்.

நேதாஜியின் பிறந்த நாள்விழா, இனி ஆண்டுதோறும், ‘பராக்கிரம திவஸ்’ எனப்படும், வீரதீரர் தினமாக கொண்டாடப்படும். நாட்டின் வீரத்துக்கு, அவர் உந்து சக்தியாக இருந்துள்ளார்.சுதந்திர போராட்டத்தின் போது, புதியவடிவத்தில், அதை நேதாஜி சந்தித்தார். நேதாஜியை உருவாக்கிய இந்தமண்ணுக்கு தலை வணங்குகிறேன்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும், அவரதுதாக்கம் இருக்கும். சுதந்திரத்துக்காக அவர்செய்த தியாகங்கள், பங்களிப்பை, நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.எல்லை பிரச்னைகளில், இந்தியாவின் வலிமையை உணர்த்தும் புதியஅவதாரத்தை, உலக நாடுகள் பார்த்துவருகின்றன; இதற்கு, நேதாஜி விதைத்த வீரமே காரணம். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால், தகுந்தபதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது.

பெண்களின் வளர்ச்சி, சுய முன்னேற்றத்துக்கும், நேதாஜி காரணமாக இருந்துள்ளார். பெண்களின் உரிமைகுறித்து பேசப்பட்ட காலத்தில், ராணி ஜான்சி படைப்பிரிவை உருவாக்கி, சுதந்திர போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தினார்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.

முன்னதாக, தேசியநூலகத்தில் உள்ள நேதாஜியின் சிலைக்கு, மோடி மலரஞ்சலி செலுத்தினார். இங்கு, 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உருவாக்கியுள்ள, 120 அடி நீள ஓவியத்தை பார்த்துரசித்தார். இதைத் தவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...