நேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி

சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி, ”இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனாவுக்கான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி உதவுவதை பார்த்து, பெருமைப் பட்டிருப்பார்,” என, குறிப்பிட்டார்.

மேற்குவங்கத்தில்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த நாள்விழா கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடந்தது. பிரதமர் மோடியும், முதல்வர் மம்தாவும் நீண்டநாளுக்குப்பின் ஒரேவிழாவில் இப்போதுதான் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு, தற்சார்பு நிலையை எட்டுவதை எந்தசக்தியாலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும், நாம்வழங்கி உதவுவதை பார்த்து பெருமைப் பட்டிருப்பார்.

நேதாஜியின் பிறந்த நாள்விழா, இனி ஆண்டுதோறும், ‘பராக்கிரம திவஸ்’ எனப்படும், வீரதீரர் தினமாக கொண்டாடப்படும். நாட்டின் வீரத்துக்கு, அவர் உந்து சக்தியாக இருந்துள்ளார்.சுதந்திர போராட்டத்தின் போது, புதியவடிவத்தில், அதை நேதாஜி சந்தித்தார். நேதாஜியை உருவாக்கிய இந்தமண்ணுக்கு தலை வணங்குகிறேன்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும், அவரதுதாக்கம் இருக்கும். சுதந்திரத்துக்காக அவர்செய்த தியாகங்கள், பங்களிப்பை, நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.எல்லை பிரச்னைகளில், இந்தியாவின் வலிமையை உணர்த்தும் புதியஅவதாரத்தை, உலக நாடுகள் பார்த்துவருகின்றன; இதற்கு, நேதாஜி விதைத்த வீரமே காரணம். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால், தகுந்தபதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது.

பெண்களின் வளர்ச்சி, சுய முன்னேற்றத்துக்கும், நேதாஜி காரணமாக இருந்துள்ளார். பெண்களின் உரிமைகுறித்து பேசப்பட்ட காலத்தில், ராணி ஜான்சி படைப்பிரிவை உருவாக்கி, சுதந்திர போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தினார்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.

முன்னதாக, தேசியநூலகத்தில் உள்ள நேதாஜியின் சிலைக்கு, மோடி மலரஞ்சலி செலுத்தினார். இங்கு, 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உருவாக்கியுள்ள, 120 அடி நீள ஓவியத்தை பார்த்துரசித்தார். இதைத் தவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...