புதுவையில் பாஜக 23 இடங்களை கைப்பற்றும்

புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி துரோகமிழைத்து விட்டார், புதுச்சேரியில் பாஜக 23க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சிஅமைக்கும் என்று பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்துதிட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என உறுதிதந்தார்.தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணமாக பாஜக தேசிய தலைவர் நட்டா வந்தார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார், அங்கிருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள விமானதளத்திற்கு இன்று வந்தார்.

அங்கு அவரை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்ததான் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்துகொடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நட்டா ஆளுநர் மாளிகை அருகில்உள்ள பாரதியார் சிலைக்கு வந்தார். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார், பின்னர் அங்கிருந்து மீண்டும் கார் மூலம் புறப்பட்டு ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் நமச்சிவாயம் ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த 28- ம் தேதி தைப்பூசநாளில் பாஜகவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியதலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

தற்போது புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் நட்டா முன்பாக நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பங்கேற்று பாஜகவில் இணைந்தனர். இதற்காக அவர்கள் பேருந்து, வேன், கார் ஆகியவற்றின் திரண்டனர். மேலும் மயிலாட்டம் ஒயிலாட்டம், கெண்டைமேளம், கொட்டு, தப்பாட்டம், ஆகியவற்றுடன் ஒவ்வொருதொகுதியில் இருந்தும் ஆதரவாளர்கள் பேனர்களை பிடித்தவாறு பொதுக் கூட்டத்துக்கு வந்தனர்.

அதேபோல் ஊசுடுதொகுதியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆதரவாளர்களும் கார் மற்றும் வேன்களில்வந்து கட்சியில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது

ஆன்மீக பூமியான புதுவைக்கு வந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் மத்திய பாஜக ஆட்சியில நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையில் மத்தியஅரசால் 6 லட்சம் எல்இடி பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, 13 ஆயிரத்து 500 பெண்களுக்கு இலவச எரிவாயுஇணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 32 ஆயிரம் ஏழைபெண்களுக்கு ஜன்தன் வங்கிகணக்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முமுவதும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இலவச மருத்துவகாப்பீடு செய்யப்பட்டுள்ளது, புதுவையில் பிரதமர் மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் பயனடைகின்றனர், ஜிப்மருக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 100 கோடி மத்தியஅரசு நிதி வழங்குகிறது ஜிப்மர் கிளை காரைக்காலில் அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி 130 கோடி மக்களுக்கும் பல்வேறு புதியதிட்டங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். கரோனாவில ஒரே நாளில் 10 லட்சம் சோதனைகளை நாம் செய்துள்ளோம். ஆண்டுக்கு 3 லட்சம் வெண்டிலேட்டர்களையும் கோவிட் கிட்டுகளையும் தயாரிக்கிறோம். தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து உலகளவில் இந்தியா முன்னேற்ற பாதையில் உள்ளது.ரேஷன் கடைகளை புதுவையில் மூடிவிட்டதாக கூறினார்கள்.

இதனைகேட்க எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மத்திய அரசு புதுவைக்கு 25 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி வழங்கியுள்ளது. இதுதான் புதுவை ஏழைகளுக்கு கிடைத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது இணையமைச்சராக இருந்த நாராயணசாமி ஜார்கண்ட் மாநிலத்திற்கு 5 ஆயிரம்கோடி கடனை தள்ளுபடி செய்தார். அப்போது புதுவையின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை.

மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். புதுவையின் நிலை விரைவில்மாறும். புதுவையில் பாஜக 23 இடங்களை கைப்பற்றும். பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்பபடும், உள்ளாட்சிதேர்தல நடத்தப்படும், புதிய ரெயில்பாதை அமைக்கப்படும். புதுவை காரைக்காலில் மேம்பாலம் அமைக்கப்படும் மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருவோம்.

சம்பளம் இன்றி தவிக்கும அரசு ஊழியர்களுக்கு நிலுவைதொகையுடன் முழுமையான சம்பளத்தை வழங்குவோம், ஆட்சிமாற்றம் வந்தபிறகு ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதனை புதுவை மக்கள் உணர்வார்கள், உங்கள் உற்சாகத்தை பார்க்கும்போது பாஜகவிற்கு 23 க்கும் மேற்பட்ட இடங்களை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...