பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்? 2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்முன்னர், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் இருந்தது. மதிய உணவு திட்டம். இதில் பொய்யான கணக்கு கொடுத்து கையாடல் செய்யப் பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யாமல் பொய்பெயர் பட்டியல் சேர்த்து கொள்ளை போடப்பட்டது. சமையல் எரிவாயு ஒரு வீட்டுக்கு 5 இணைப்புவரை பெற்று, அதிக விலையில் வெளியில் விற்கப்பட்டது.

NGO என்ற பெயரில், இந்தியாவில் இருக்கும் ஏழைமக்களுக்கு உதவுவதாக பணம் பெற்று, அதை மதமாற்று வியாபாரத்துக்கும் சுய லாபத்துக்கும் பயன் படுத்தப் பட்டது.இதைவிட பெரிய கொள்ளை என்ன என்றால், அரசியல் வாதிகள் பொது வாழ்வில் கொள்ளைபோடும் கறுப்பு பணத்தை, வெள்ளை பணம் ஆக்குவதற்கு, போலியாக நிறுவனங்கள் தொடங்கி, அவற்றில் லாபம்பெற்றதாக கணக்கு காட்டி வந்தார்கள். போலி ஆசிரியர்கள், போலி ரேசன் அட்டைகள், ஏராளம்.

வரிகட்டாமல் வியாபாரம். முன்பெல்லாம் தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டும் என்றால் பில் இல்லாமல் வாங்க இடிந்தது. அந்தமுறைகேடு எல்லா பொருள் விற்பனையிலும் இருந்துவந்தது. GST மூலம் அது ஒழித்து கட்டப்பட்டது. அதனால் வியாபாரிகளுக்கு கோபம்.

பாஸ்போட்டு , விசாஇல்லாமல் இந்தியாவுக்குள் வேலிதாண்டி வந்தவர்களை கண்டறியும் முயற்சியில் CAA கொண்டு வரப்பட்டது, காஷ்மீ்ர் தனி அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது, முத்தலாக் முறை முடிவுக்கு கொண்டுவந்தது இவை எல்லாம் இஸ்லாமியருக்கு பிடிக்கவில்லை.

இவை எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை, பெண் உரிமையை, பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் ஆகும். இந்த முறைகேடுகளை ஒழித்து கட்டும் முயற்சியில் மோடி அரசு ஓரளவு வெற்றிகண்டுள்ளது.

அண்டை நாட்டு உதவியுடன் நடந்துவந்த தீவிரவாத செயல்கள் 99% வரை ஒடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு எல்லையில் ஆக்கிரமிப்புகள் முறியடிக்கப்பட்டது.
அதிவேக சாலைகள், அதிவேக ரயில்கள், நவீன துறை முகங்கள், உள்நாட்டு தயாரிப்புகள் (make in India), இலவச வீடுகள், சுத்தமான இந்தியா திட்டத்தில் எங்கும் கழிவறைகள், இலவச சமையல் எரிவாயு, விவசாய உதவி (6000)இவை மோடி அரசின் சிலகுறிப்பிட தக்க சாதனைகள்.இன்னும் செய்ய வேண்டியது ஏராளம்.

இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு விலைவாசி ஏற்றம் என்று மக்களை தூண்டி விடுகிறார்கள். சம்பளம் ஏறலாம் விலை ஏறகூடாது என்பது எந்த பொருளாதார மேதையின் கண்டுபிடிப்பு? கொத்தனார் கூலி ரூ 500 இருந்தபோது பெட்ரோல் விலை ரூ 70. இப்போ கொத்தனார் கூலி ஆயிரம். இரண்டுமடங்கு. பெட்ரோல் விலை 2 மடங்கு விற்க வில்லை. இது போல்தான் சமயல் எரி வாயு விலையும். அறிவு பூர்வமாக சிந்தித்து பார்த்தால் புரியும்.இந்தியா வளர்ச்சி பாதையில் தொடர்ந்துபயணிக்க வேண்டும் என்றால், ஊழல் கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...