புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெறும்

புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இளைஞர்களின் பேராதரவைபெற்றிருப்பது ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. 23-27 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றி வருகிறது பாஜக.

இந்நிலையில், இந்த சட்டமன்றதேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்டநிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதிசெய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்துகேட்டது. அந்த கருத்துகணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் பேராதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. வயது வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில், 18-25 வயதினரில் 56% பேர் பாஜக – அதிமுக கூட்டணிக்கும், 37% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தவயது பிரிவினர்தான் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள். அவர்களின் ஆதரவு பாஜகவிற்கு அமோகமாக இருப்பதை சர்வே உணர்த்துகிறது.

அதேபோல, 26-35 வயதினரில் 48% பேர் பாஜக கூட்டணிக்கும், 38% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித் துள்ளனர். 36-50 வயதினரில் 51% பேர் பாஜக கூட்டணிக்கும், 33% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவுதெரிவித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவும் பாஜகவிற்கே உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 53% பேர் பாஜகவிற்கும், 34% பேர் காங்கிரஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தசர்வேயின் மூலம் புதுச்சேரியில் இளைஞர்களின் பேராதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியேவிட்டது. இந்த சர்வேயை கண்டு காங்கிரஸ் கலங்கித்தான் போயுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...