IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது

அண்ணாமலை IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது.”வாக்குகேட்டு யார் வேண்டுமானாலும் வரலாம் – அப்படி வருபவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – வோட்டு போடும்போது உங்கள் எண்ணத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துங்கள்”- என்று மாநில அளவிலான ஜமாத் மற்ற ஜமாத்களுக்கு வழிகாட்டியுள்ளது!

இதுதான் சரியான விஷயம்! ஆனால் இந்தசரியான விஷயத்தை – “ஆமாம்! எவரும் வாக்குக்கேட்டு எந்தப் பகுதிக்கும் வருவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு – அப்படி வருபவர்களை – அவர்களது கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும்கூட கண்ணியமாக நடத்த வேண்டும்! நம்முடைய எண்ணம் எதுவோ அதை வோட்டு போடும்போது வெளிப்படுத்த வேண்டும்!”…

இந்த அடிப்படையான விஷயத்தை…எல்லாருக்கும் பட்டவர்த்தனமாகப் புரியக்கூடிய எளிய உண்மையை ஆணித்தரமாகச் சொல்வதற்கே…ஒரு அண்ணாமலை தேவைப்படுகிறார்!அதிலும் அவர் ஆணி அறைந்தாற்போல – “பள்ளப்பட்டி இந்தியத் திருநாட்டுக்குள்தான் இருக்கிறது – இந்தியன் CONSTITUTION கீழேதான் வருகிறது”- என்று ஓங்கி அழுத்தமாகச் சொன்ன பிறகுதான்…
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்து மாநில அளவிலான ஜமாத், உள்ளூர் “மூர்க்கவாதிகளை” (இது அண்ணாமலையின் வார்த்தை) திருத்த முன்வருகிறது!
ஆனால் இத்தனை அமர்க்களத்திலும் கருத்து சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற…காங்கிரசும், திமுகவும், கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு, இடதுசாரி, லிபரல் அறிவுசீவிகளும்…

வாயில் வாழைப்பழத்தை கெட்டியாக அடக்கிக்கொண்டு மௌனம் காத்தனர்!
அது எப்படி ஒரு சுதந்திரமான நாட்டில், எந்த ஒரு மதக்குழுவும் “இன்னின்னார் எங்கள் பகுதிக்கு வோட்டு கேட்டு வரக்கூடாது?”- என்று ஃபத்வா போட முடியும்?
ஒரு வேளை மௌனமாக ரசிக்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?
பள்ளப்பட்டி ஜமாத் – அண்ணாமலை குறிப்பிட்டது போல – திமுகவின் கிளையோ?
காங்கிரஸ்காரனுக்கு இதுபற்றி எல்லாம் கருத்தே இல்லையோ? ஐயா நான் ஒருவேட்பாளர் – எந்தக் கட்சியும் சாராத சுயேச்சை வேட்பாளராக – எந்தவித ஆள்பலமும், அமைப்பு பலமும் இல்லாதவராகவே இருக்கலாம்! ஆனால் நான்போட்டியிடும் தொகுதியின் எல்லாபகுதி மக்களையும் சென்று சந்தித்து வோட்டு கேட்கும் உரிமை எனக்கு இல்லையா என்ன?.

இதுபற்றி எல்லாம் – பள்ளப்பட்டி ஜமாத்தாரின் செயல்களுக்கு – எந்த எதிர்வினையும் ஆற்றாமல்…வாய்மூடி மௌனம்காக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் – கேரளாவில் முஸ்லீம் லீக் உங்களுக்கு எதிரான காங்கிரஸ் (UDF) கூட்டணியில் இருக்கிறது. அங்கே மலப்புரம்மாவட்டம் புழுவதும் கம்யூனிஸ்டுகள் உள்ளேயே வரக்கூடாது என்று அங்குள்ள – பள்ளப்பட்டியைப் போல நூறு மடங்கு வலு உள்ள ஜமாத்கள் – தடைபோட்டால் உங்கள் கதி? அங்கே உடனே கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிப்பு வியாதி வந்துவிடும்!

மதச்சார்பின்மை தினவு எடுக்க ஆரம்பித்துவிடும்! காங்கிரஸ் காரனுக்கு சிறுபான்மையினர் அரிப்புவியாதி வந்துவிடும்!, காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் – தேசியக்கட்சிகள் என்ற முறையில் பள்ளப்பட்டி ஜமாத்விட்ட அறிக்கையைக் கண்டித்திருக்க வேண்டும்!.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...