IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது

அண்ணாமலை IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது.”வாக்குகேட்டு யார் வேண்டுமானாலும் வரலாம் – அப்படி வருபவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – வோட்டு போடும்போது உங்கள் எண்ணத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துங்கள்”- என்று மாநில அளவிலான ஜமாத் மற்ற ஜமாத்களுக்கு வழிகாட்டியுள்ளது!

இதுதான் சரியான விஷயம்! ஆனால் இந்தசரியான விஷயத்தை – “ஆமாம்! எவரும் வாக்குக்கேட்டு எந்தப் பகுதிக்கும் வருவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு – அப்படி வருபவர்களை – அவர்களது கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும்கூட கண்ணியமாக நடத்த வேண்டும்! நம்முடைய எண்ணம் எதுவோ அதை வோட்டு போடும்போது வெளிப்படுத்த வேண்டும்!”…

இந்த அடிப்படையான விஷயத்தை…எல்லாருக்கும் பட்டவர்த்தனமாகப் புரியக்கூடிய எளிய உண்மையை ஆணித்தரமாகச் சொல்வதற்கே…ஒரு அண்ணாமலை தேவைப்படுகிறார்!அதிலும் அவர் ஆணி அறைந்தாற்போல – “பள்ளப்பட்டி இந்தியத் திருநாட்டுக்குள்தான் இருக்கிறது – இந்தியன் CONSTITUTION கீழேதான் வருகிறது”- என்று ஓங்கி அழுத்தமாகச் சொன்ன பிறகுதான்…
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்து மாநில அளவிலான ஜமாத், உள்ளூர் “மூர்க்கவாதிகளை” (இது அண்ணாமலையின் வார்த்தை) திருத்த முன்வருகிறது!
ஆனால் இத்தனை அமர்க்களத்திலும் கருத்து சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற…காங்கிரசும், திமுகவும், கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு, இடதுசாரி, லிபரல் அறிவுசீவிகளும்…

வாயில் வாழைப்பழத்தை கெட்டியாக அடக்கிக்கொண்டு மௌனம் காத்தனர்!
அது எப்படி ஒரு சுதந்திரமான நாட்டில், எந்த ஒரு மதக்குழுவும் “இன்னின்னார் எங்கள் பகுதிக்கு வோட்டு கேட்டு வரக்கூடாது?”- என்று ஃபத்வா போட முடியும்?
ஒரு வேளை மௌனமாக ரசிக்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?
பள்ளப்பட்டி ஜமாத் – அண்ணாமலை குறிப்பிட்டது போல – திமுகவின் கிளையோ?
காங்கிரஸ்காரனுக்கு இதுபற்றி எல்லாம் கருத்தே இல்லையோ? ஐயா நான் ஒருவேட்பாளர் – எந்தக் கட்சியும் சாராத சுயேச்சை வேட்பாளராக – எந்தவித ஆள்பலமும், அமைப்பு பலமும் இல்லாதவராகவே இருக்கலாம்! ஆனால் நான்போட்டியிடும் தொகுதியின் எல்லாபகுதி மக்களையும் சென்று சந்தித்து வோட்டு கேட்கும் உரிமை எனக்கு இல்லையா என்ன?.

இதுபற்றி எல்லாம் – பள்ளப்பட்டி ஜமாத்தாரின் செயல்களுக்கு – எந்த எதிர்வினையும் ஆற்றாமல்…வாய்மூடி மௌனம்காக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் – கேரளாவில் முஸ்லீம் லீக் உங்களுக்கு எதிரான காங்கிரஸ் (UDF) கூட்டணியில் இருக்கிறது. அங்கே மலப்புரம்மாவட்டம் புழுவதும் கம்யூனிஸ்டுகள் உள்ளேயே வரக்கூடாது என்று அங்குள்ள – பள்ளப்பட்டியைப் போல நூறு மடங்கு வலு உள்ள ஜமாத்கள் – தடைபோட்டால் உங்கள் கதி? அங்கே உடனே கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிப்பு வியாதி வந்துவிடும்!

மதச்சார்பின்மை தினவு எடுக்க ஆரம்பித்துவிடும்! காங்கிரஸ் காரனுக்கு சிறுபான்மையினர் அரிப்புவியாதி வந்துவிடும்!, காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் – தேசியக்கட்சிகள் என்ற முறையில் பள்ளப்பட்டி ஜமாத்விட்ட அறிக்கையைக் கண்டித்திருக்க வேண்டும்!.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...