மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகத்திற்கு வெளியேவந்து மக்களுக்கான மனிதராக விளங்கினார். பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என பல்துறைகளிலும் மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டினார்.
சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் விவேக் அவர்கள் பல்வேறு விருதுகளைபெற்று மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்புகூட மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுகிற வகையில் தடுப்பூசிபோட வேண்டுமென்ற பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தார்.
மாரடைப்பு நோய் அவரை நம்மிடமிருந்து மறைந்துவிட்டது. அவருடைய இடத்தை சமூகத்திலும் சரி திரையுலகிலும் சரி ஈடுசெய்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அனைவரையும் சிரித்து சிந்திக்கவைக்க தெரிந்தவர், இன்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரை உலகிற்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |