மதுரையில் பாஜகவினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவிக்க பாஜகவினர் வந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். அப்போது நடந்த மோதலில் பாஜகவினர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடைசெய்ய வலியுறுத்தியும், பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள்கட்சியினரின் வன்முறைக்கு பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்.
திருமாவளவன் வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும். இல்லாவிட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது.
பாஜகவினரைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:
மதுரையில் போலீஸார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். பாஜகவினர், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜ கவினருக்கு எதிரான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
1partaken