நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக காவல்துறை மரியாதை

நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக அவரது இறுதிச் சடங்கின் போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவுசெய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதிகேட்டது. தேர்தல் ஆணைய அனுமதி அளிக்கப் பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக் திடீர்மாரடைப்பு காரணமாக நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. எக்மோ கருவியுடன் சிகிச்சையில் இருந்த அவருக்கு காலையில் மீண்டும் ஏற்பட்டமாரடைப்பு காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரதுஇல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். திரைப்படத்தில் வசனம் பேசுவது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டியவர்.
அப்துல்கலாம் வேண்டுகோளை ஏற்று ஒருகோடி மரம்நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றவர்.

தனது அயராத பணியினால் 33.5 லட்சம் மரங்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் நடுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். பல லட்சம் இளைஞர்கள் அவர் வழியைப்பின்பற்றி மரம் நட்டு வருகின்றனர். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரதுமறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மரம்நட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

திமுக, அதிமுக பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட சமகால தலைவர்கள் அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் விவேக். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது சமூகபொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அவர் முன்னின்று எடுத்தமுயற்சிகளை அரசின் அனைத்து தரப்பினரும் அறிவர்.

தான் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம்காட்டுவதை அறிந்துதான் தடுப்பூசி போடுவதை ஒருஇயக்கமாக மாற்றி சுகாதாரத்துறை செயலருடன் இணைந்து விழிப்புணர்வுபேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகர் விவேக் மறைவுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல்நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. விவேக்குக்கு அரசு மரியாதையாக காவல்துறை மரியாதை செலுத்த அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விவேக்குக்கு இறுதி அஞ்சலியாக காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்க அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...