நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக காவல்துறை மரியாதை

நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக அவரது இறுதிச் சடங்கின் போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவுசெய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதிகேட்டது. தேர்தல் ஆணைய அனுமதி அளிக்கப் பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக் திடீர்மாரடைப்பு காரணமாக நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. எக்மோ கருவியுடன் சிகிச்சையில் இருந்த அவருக்கு காலையில் மீண்டும் ஏற்பட்டமாரடைப்பு காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரதுஇல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். திரைப்படத்தில் வசனம் பேசுவது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டியவர்.
அப்துல்கலாம் வேண்டுகோளை ஏற்று ஒருகோடி மரம்நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றவர்.

தனது அயராத பணியினால் 33.5 லட்சம் மரங்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் நடுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். பல லட்சம் இளைஞர்கள் அவர் வழியைப்பின்பற்றி மரம் நட்டு வருகின்றனர். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரதுமறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மரம்நட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

திமுக, அதிமுக பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட சமகால தலைவர்கள் அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் விவேக். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது சமூகபொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அவர் முன்னின்று எடுத்தமுயற்சிகளை அரசின் அனைத்து தரப்பினரும் அறிவர்.

தான் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம்காட்டுவதை அறிந்துதான் தடுப்பூசி போடுவதை ஒருஇயக்கமாக மாற்றி சுகாதாரத்துறை செயலருடன் இணைந்து விழிப்புணர்வுபேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகர் விவேக் மறைவுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல்நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. விவேக்குக்கு அரசு மரியாதையாக காவல்துறை மரியாதை செலுத்த அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விவேக்குக்கு இறுதி அஞ்சலியாக காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்க அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...