100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய பொம்மை

கர்நாடகாவின் புதியமுதல்வராக பாஜக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் பசவராஜ் பொம்மை. லிங்காயத்சமுதாயத்தைச் சேர்ந்த இவரை எடியூரப்பாக முதல்வராக முன்மொழிந்தார். இவர் தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.

பசவராஜ் பொம்மை, உடுபபி மற்றும் ஹாவேரி உடுப்பி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் பதவிவிகித்துள்ளார். முன்னதாக நீர்வளத்துறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கர்நாடகாவின் ஹூப்ளியில் 1960ம் ஆண்டு ஜனவரி 28ம்தேதி பிறந்தவர் பசவராஜ் பொம்மை. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மையின் மகன்தான் இந்த பசவராஜ் பொம்மை. அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐக்கிய ஜனதா தளததில் தனது அரசியல்பயணத்தை ஆரம்பித்தார்.

தர்வாட் தொகுதியில்இருந்து 1998ம் ஆண்டு முதல் 2004 வரை கர்நடாகா சட்டமேலவை உறுப்பினராக இரண்டுமுறை தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2008ம் ஆண்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். 2008ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பாஜக சார்பில் காவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சராக உள்ளார்.

பிஇ பட்டதாரியான பசவராஜ் பொம்மை விவசாயமும் செய்துவருகிறார். இவர் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தகாலக்கட்டத்தில் எண்ணற்ற நீர்ப்பாசன திட்டங்களை கொண்டுவந்தார். கர்நாடகாவில் நீர்ப்பாசன விஷயங்களைப் பற்றி தீவிரமாக அறிந்துவைத்துள்ள இவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகானில் இந்தியாவின் முதல் 100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்தியவர் ஆவார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...