உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்று கண்டறிந்து பட்டியலிட்டு அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று (6-8-2021) காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் அவரது உரை விவரம்:

கொரோனா நோய் பரவலை  தொடர்ந்து புதிதாக உருவான வாய்ப்புக்களை இந்தியா தனக்குசாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய பொருள்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அத்துடன் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் இதன்மூலம் 400 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வதற்கு நான்குஅம்சங்கள் உதவியாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் .உள்நாட்டில் உற்பத்தி பலமடங்காக உயர்ந்திருப்பது,. உற்பத்திக்கான செலவு குறைந்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது, இந்தியாவின் ஏற்றுமதி முயற்சிகள், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் தேவைகுறித்து மதிப்பிடவேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்யும்பொழுது இந்திய பொருள்கள் எவற்றை அந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்க வேண்டும் அந்த பொருட்களின் பட்டியலை தயார்செய்து அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தற்பொழுது ஏற்றுமதி செய்ய படுகிறது இந்திய பொருளாதாரம் அதன் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றின் வலிமையோடு ஒப்பிடும்பொழுது ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு உயர்த்த இயலும்.

இந்தியா தனித்திறமை அனைத்தையும் பயன்படுத்தி புதியவாய்ப்புகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...