உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்று கண்டறிந்து பட்டியலிட்டு அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று (6-8-2021) காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் அவரது உரை விவரம்:

கொரோனா நோய் பரவலை  தொடர்ந்து புதிதாக உருவான வாய்ப்புக்களை இந்தியா தனக்குசாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய பொருள்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அத்துடன் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் இதன்மூலம் 400 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வதற்கு நான்குஅம்சங்கள் உதவியாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் .உள்நாட்டில் உற்பத்தி பலமடங்காக உயர்ந்திருப்பது,. உற்பத்திக்கான செலவு குறைந்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது, இந்தியாவின் ஏற்றுமதி முயற்சிகள், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் தேவைகுறித்து மதிப்பிடவேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்யும்பொழுது இந்திய பொருள்கள் எவற்றை அந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்க வேண்டும் அந்த பொருட்களின் பட்டியலை தயார்செய்து அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தற்பொழுது ஏற்றுமதி செய்ய படுகிறது இந்திய பொருளாதாரம் அதன் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றின் வலிமையோடு ஒப்பிடும்பொழுது ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு உயர்த்த இயலும்.

இந்தியா தனித்திறமை அனைத்தையும் பயன்படுத்தி புதியவாய்ப்புகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...