தஞ்சாவூரில் அதுவும் ஒரேதெருவைச் சேர்ந்த இருவர் ஆளுநர்

தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இருவர் பாஜகவால் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்..இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் இதுவரை நிகழ்ந்ததில்லை..இன்று மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் படுள்ள இல கணேசன் அவர்களின் சொந்த ஊர்(எங்கள்) தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.

இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கம் அவர்கள் இவர்கள் குறித்து கூறிய போது ”மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு.

இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார்.

இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க. அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.

சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். 1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.

தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
நானும் தஞ்சாவூர்காரன் என்பதால்..எங்கள் ஊர்காரர்கள் இருவரை ஆளுநராக நியமித்து தஞ்சைக்கு மேலும் பெருமை சேர்த்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி…! நன்றி!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...