தஞ்சாவூரில் அதுவும் ஒரேதெருவைச் சேர்ந்த இருவர் ஆளுநர்

தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இருவர் பாஜகவால் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்..இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் இதுவரை நிகழ்ந்ததில்லை..இன்று மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப் படுள்ள இல கணேசன் அவர்களின் சொந்த ஊர்(எங்கள்) தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.

இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கம் அவர்கள் இவர்கள் குறித்து கூறிய போது ”மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு.

இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார்.

இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க. அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.

சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். 1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.

தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.
நானும் தஞ்சாவூர்காரன் என்பதால்..எங்கள் ஊர்காரர்கள் இருவரை ஆளுநராக நியமித்து தஞ்சைக்கு மேலும் பெருமை சேர்த்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி…! நன்றி!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...