‘இசொத்து’ அட்டைகளை வழங்கிய பிரதமர்

மத்திய பிரதேசத்தில் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின்கீழ், லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, ‘இசொத்து’ அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோகான்பரன்ஸ்’ வழியாக நேற்று வழங்கினார்.

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளதுபோல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன்பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன் படுத்தவும் இந்தத்திட்டம் வழிவகுக்கிறது.’ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டிவிமானம் வாயிலாக, கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு, மறுவரையறை செய்வதையும், இதுநோக்கமாகக் கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இத்திட்டம் ஊக்கப் படுத்துகிறது.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சிநடக்கும் மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, இசொத்து அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நேற்றுவழங்கினார்.அப்போது பயனாளியருடன் பிரதமர் மோடி பேசியதாவது:கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒருவரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது.

இத்திட்டத்தின் வாயிலாக நாடுமுழுதும் அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இதுவெறும் சொத்து ஆவணம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், கிராம மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் திட்டமாகவும் உள்ளது. நாட்டில் ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த பலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள், தொலைதுார பகுதிகளில்வசிப்பவர்கள் பெரும்பலன் அடைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...