‘இசொத்து’ அட்டைகளை வழங்கிய பிரதமர்

மத்திய பிரதேசத்தில் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின்கீழ், லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, ‘இசொத்து’ அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோகான்பரன்ஸ்’ வழியாக நேற்று வழங்கினார்.

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளதுபோல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன்பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன் படுத்தவும் இந்தத்திட்டம் வழிவகுக்கிறது.’ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டிவிமானம் வாயிலாக, கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு, மறுவரையறை செய்வதையும், இதுநோக்கமாகக் கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இத்திட்டம் ஊக்கப் படுத்துகிறது.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சிநடக்கும் மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, இசொத்து அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நேற்றுவழங்கினார்.அப்போது பயனாளியருடன் பிரதமர் மோடி பேசியதாவது:கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒருவரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது.

இத்திட்டத்தின் வாயிலாக நாடுமுழுதும் அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இதுவெறும் சொத்து ஆவணம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், கிராம மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் திட்டமாகவும் உள்ளது. நாட்டில் ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த பலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள், தொலைதுார பகுதிகளில்வசிப்பவர்கள் பெரும்பலன் அடைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...