குஜராத் நரேந்திர மோடியின் அசரவைக்கும் நீர் மேலாண்மை

குஜராத்தில் விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், கால்நடை பராமரிப்புக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் குறைவு. எனவே இறைச்சி வியாபாரம் அங்கு பெரியளவில் இல்லை. ஆனால், பால் வளம் அமோகம். பெரும்பான்மையான பால் – வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், சீஸ் என்று மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு, இந்திய

சந்தையில் சக்கை போடு போடுகின்றன. (அமுல் – குஜராத் நிறுவனம் என்பதை மறந்து விடாதீர்கள்).

10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கு எப்படி தண்ணீர் பற்றி கவலைப் பட்டார்களோ, அதே அளவு கால்நடைகளுக்கான தண்ணீர் குறித்தும் குஜராத் வாசிகள் கவலைப் பட்டார்கள். குஜராத் அரசும் அதை மனதில் வைத்தே செயல்பட்டது.

முன்பு தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இடம் பெயரும் அவலம் இருந்து வந்தது. 2001- ஆம் ஆண்டு வரை ரயில்கள் மூலம் குடிநீரை மாநிலத்தின் பல பாகங்களுக்கும் எடுத்துச் சென்றனர். சுமார் 4,000 கிராமங்களுக்கு லாரிகள் மூலமாகவே தண்ணீர் சப்ளை நடைபெற்றது. இதுபோக, குடிநீர் கோளாறுகளால் மக்களை நோய் தாக்கும் அவலமும் இருந்து வந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நீர் ஆதாரங்கள் அனைத்தும் முன்னேற்றப்பட்டன. கிராம அளவில் நீரைப் பாதுகாக்கும், சுத்தப்படுத்தும் பணிகள் முடுக்கப்பட்டன. இன்று குஜராத் முழுக்க குடிநீருக்கான பைப்புகள் பொருத்தப்பட்டு, கடைக்கோடி கிராமத்தில் கூட வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. குறிப்பாக பழங்குடியினர் பகுதியிலும் 100 சதவிகித குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. 4 ஆயிரம் கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் போன நிலைமை மாறி, இன்றைக்கு வெறும் 114 கிராமங்களுக்கு மட்டுமே லாரிகள் மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது. "அடுத்த முறை நீங்கள் வந்தால், அந்த 114 கிராமங்களும் கூட பைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுவிட்டன என்ற தகவலைப் பெறலாம்" என்றார் ஓர் அதிகாரி.

குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட்டது. ஆனால், மோடியின் அரசு அசந்து போகவில்லை. மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது குஜராத் அரசு. அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத்.

அரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு.

எந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. 'இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது' என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. "Users are the best managers" என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம்.

கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'தினசரி ஒரு ரூபாய்' என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.

இதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.

'வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்' என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு 'டேங்க் நிரம்பி விட்டது' என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது.

"நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு ஒதுக்கியுள்ளோம். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்" என்று கூறிய குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ஐ.ஏ.எஸ்., மேலும் முதல்வர் நரேந்திர மோடி பற்றி விவரித்தார்.

"பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு" – இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.

இந்த வரிசையில்தான் எல்லா துறைகளிலும் குஜராத் வெற்றியை ஈட்டி வருகிறது. டெட்லைன் நிர்ணயிப்பதில் முதல்வர் நரேந்திர மோடி மிகுந்த கவனம் காட்டுவார். 'அதற்காக நிதி கூடுதல் ஆனால் கவலைப்பட வேண்டாம்' என்பார். ஒரு ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டால், அதை அந்த ஆட்சிக் காலத்திலேயே முடித்து விட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுவார். சொன்ன காலத்தில் முடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது என்பது அவர் எண்ணம். அப்படித்தான் செக் டேம்கள், வாட்டர் பைப்புகள் எல்லாம் துரித வேகத்தில் நடந்தன. "குடிநீர் மேலாண்மைக்காக 2008-ல் பிரதமரிடம் விருது; 2009-ல் ஐக்கிய நாடுகள் சபை விருது; 2010-ல் காமன்வெல்த் விருது என்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு விருதைப் பெற்று வருகிறோம்" என்று குறிப்பிட்டார் தாஸ்.

நாம் இங்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டரை 15 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறோம். வீடுகளுக்கு 25 லிட்டர் தண்ணீர் கேன்களை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். குஜராத்திலும் மினரல் வாட்டர் கிடைக்கிறது. லிட்டர் 20 பைசாதான். அரசாங்கமே கொடுக்கிறது. அதுவும் கிராமப்புறத்தில்! அந்த அதிசயத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags; குஜராத், நரேந்திர மோடியின், நீர் மேலாண்மை, நரேந்திர மோடிக்கு , நரேந்திர மோடியை

நன்றி ; துக்ளக்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...