மத்தியப் பிரதேச ஹர்சித்தி மாதா ஆலயம்

மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன என அனைவரும் அறிவார்கள் . முன்னர்நான் கூறியது போல மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய ஆலயங்களை அவர்நிறுவி அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாம் . அவர்காலத்தில் தோன்றிய மற்றொரு ஆலயம் ஹர்சித்தி மாதா ஆலயம் . இந்த ஆலயம் 1 3 அல்லது 14 ஆம் ஆண்டை சார்ந்தது

என்ற கருத்து உள்ளது. ஹர்சித்தி என்றால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி என்ற பொருள் உண்டு. ஒரு விசித்திரம் என்ன எனில் பார்வதியின் உடல் விழுந்த இடத்தில் எழும்பிய ஆலயத்தின் தேவி வைஷ்ணவ சக்தி தேவியாக கூறப்படுகின்றாள் . கீழே காளி , அதற்கு மேல் அன்னபூ ர்ணியாக உள்ள மஹாலஷ்மி மற்றும் அதற்கு மேல் மஹா சரஸ்வதி என்ற மூன்று தேவிகளை அங்கு வைத்து மந்திர சக்திகள் ஏற்றி ஸ்தாபிக்கப்பட்டு உள்ளனவாம். அந்த மஹாலஷ்மியே ஹரிசித்தி மாதாவாக உள்ளதால் அது வைஷ்ணவ கடவுளாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் .

1447 ஆம் ஆண்டு மராதா மன்னர்கள் ஆலய நுழை வாயிலில் 1008 எண்ணை விளக்குகள் ஏற்றும் விதத்தில் இரு தூண்களை அமைத்து உள்ளனர். ஆந்த தீபஸ்தம்பத்தில் உள்ள கல்வெட்டு இந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.

ஹர்சித்தி மாதா கதை

ஹர்சித்தி மாதா பற்றி இரண்டு கதைகள் உள்ளன. முதலாவது கதையின்படி தட்ச யாகத்தில் சிதையில் விழுந்து உயி ர் விட்ட பார்வதியின் உடலை தன் தோள் மீது வைத்துக் கொண்டு ஆவேசமாக நடனம் செய்து கொண்டு இருந்த பொழுது அதை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தினால் அவள் உடலைத் துண்டாக்கினர் . அவள் உடல் சிவபெருமான் நடனம் ஆடியவண்ணம் சென்று கொண்டு இருந்த பொழுது பல இடங்களில் விழ, அவை விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி ஆலயங்கள் எழுந்தன. அப்படியாக அவளுடய இடுப்புப் பகுதி விழுந்த இடமே ஹர்சித்தி ஆலயமாயிற்றாம் .

ஸ்கந்த புராணக் கதைப்படி சாந்த் மற்றும் பிரசான்த் என்ற இரண்டு அசுரர்கள் பூமியிலும் தேவலோகத்திலும் பீதியை உண்டுபண்ணும் விதத்தில் அட்டகாசம் செய்து வந்தனர் . அப்படி அட்டகாசம் செய்து கொண்டு சென்றவர்கள் கைலாயத்தில் சிவனும் பார்வதியும் தாயக்கட்டை விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை அடைந்தனர் . அவர்களைத் தடுத்த நந்திதேவரையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினர் . அவர்கள் பெற்றிருந்த அழியா வரத்தினால் அவர்களை எந்த ஒரு தனி பிறவியும் மரணம் அடையச் செய்ய முடியாது . அதனால் அவர்களை அடக்க முடியாமல் போன சிவபெருமான் சக்தியை வேண்டினார் .

அவளும் கேட்டதை அருளும் விஷ்ணுவின் சக்தியான அன்னபூர்ணி மற்றும் சிவனின் கணமான காளியின் சக்தி என்ற இரண்டையும் உள்ளடக்கிக் கொண்டு, உடனே அங்கு வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்தாள் . அதனால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமான் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்றுத் தருபவள் எனும் விதமாக ஹர்சித்தி தேவி என அவள் அழைக்கப்படுவாள் என ஆசிர்வதித்தார். அப்படியாக அவள் அந்த அசுரர்களை தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தில் வந்து அழித்ததினால்தான் அந்த இடத்திலேயே ஹரிசித்தி ஆலயம் அமைந்தது.

ஹர்சித்தி மாதா ஆலயச் சிறப்பு

அந்த ஆலயத்தின் கற்பக்கிரகத்திற்குள் நுழையும் முன் உள்ள மண்டபத்தின் மேற் கூரையில் ஐம்பது மந்திர தேவதைகளும் ஸ்ரீ சக்கர யந்திரமும் பொறிக்கப்பட்டு உள்ளன. அதனால்தான் அந்த ஆலயத்தில் நுழைந்த பின் அந்த இடத்தில் நின்று கொண்டு தேவியை பிரார்திக்கும் பொழுதே அனைத்துப் பாபங்களும் விலகி விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஹர்சித்தி மாதா சன்னதியை சுற்றி மேலும் பல தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு சன்னதியில் ஒரு கோடி நாகமந்திரப் பிரதிட்சை செய்யப்பட்ட நாகதேவ் என்ற லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. ஆகவே அந்த சன்னதியில் நாக தோஷம் விலக் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் கூறுகின்றனா

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...