கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கெüடாவை மாற்றும் அவசியம்மில்லை என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : கர்நாடக பாரதிய ஜனதாவில் சிறு சிறு பிளவுகள் இருக்கலாம்.
அவற்றை உபி தேர்தல் முடிந்த பிறகு நிவர்த்திசெய்வோம். சதானந்தகெளடாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மக்களின் ஆதரவை பெற்றவர்தான். இருப்பினும் , அவரது பெயர் லோக்ஆயுக்த அளித்த சுரங்க முறை கேடு அறிக்கையில் இருக்கிறது . அவருக்கு நீதிமன்றத்தில் நியாயம்கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு அவருக்கு உரிய_பதவி தரப்படும் .
பாரதிய ஜனதா எந்த ஒரு சமுதாயத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானதல்ல. அதற்கு அதன் கொள்கை முக்கியம். கட்சியிலிருந்து விலகுவதாக யார்_மிரட்டினாலும் அவர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிசெல்லலாம்.
மாநிலத்தில் மூன்றரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கு அதில் ஏமாற்றமே . இப்போது ஆட்சியை சதானந்தகெüடா சிறப்பாக நடத்திவருவதால், தொடர்ந்து அவரே முதல்வராக நீடிப்பார். கட்சியை கட்டிகாத்தவர் எடியூரப்பா என்பதில் சந்தேக மில்லை. தனக்கு பதவி வழங்ககோரி அவர் கட்சியின் மேலிடத்துக்கு எந்த வித கெடுவும் விதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார் .
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.