செங்கோல் என்ன செய்யும்?

கொடுங்கோன்மை’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘செங்கோன்மை’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..

|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||

என்பதை கொடுங்கோன்மையின் உதாரணமாக காட்டுகிறார் வள்ளுவர். அதாவது, நாட்டைக் காக்கும் தலைவன், முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால்தருவது குறையும்; அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறி தவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..

இதையே, செங்கோன்மை என்றால் என்னவென்பதற்கு,

|| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ||

அதாவது, அந்தணர்கள் ஓதும்வேதத்திற்கும் அதனால் விளையும் அறத்திற்கும் மூலமுதலாய் நிற்பது மன்னவனுடைய செங்கோல் என்கிறார். அறத்தின் வழியில் நடக்கும் அரசனாலே செங்கோல்பெருமையை நிலைநாட்ட முடியும்; அதுவே நல்லாட்சி என்பதே இதன் பொருள்..

உலகம் முழுக்க எல்லா பண்பாட்டிலும் இந்த செங்கோல்முறை கடைபிடிக்கப்பட்டு, தற்போதுவரை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது, பாரதத்தில் அதன் தன்மை வேறுபட்டதாகவும், மகத்துவமிக்கதாகவும், கலாச்சார மேன்மை கொண்டதாகவும் உள்ளது. அதனால்தான் இதை ‘தர்மதண்டம்’ என்று கூட அழைக்கிறோம்..

“மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை..” என்கிறது நறுந்தொகை.

கீதையில் 10வது அத்தியாயமான விபூதி யோகத்தில் 38வது சுலோகத்திலே, “ஆள்பவனிடத்தே செங்கோல் நான்” என்று கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

தர்மபரிபாலனம் செய்து, மாறாத அறத்தை நிலைநாட்டுவதே அரசனுக்குகடமை என்பதை எல்லா சாத்திரங்களும்,இலக்கியமும் போற்றுகிறது.கொடியவர்களை தண்டித்து, மக்களைகாப்பது அரசனின் தலையாயக் கடமை. ஒரு விவசாயி, களையை நீக்கி பயிரைக் காப்பது போன்ற தேவையாகும்.

|| கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்..||

இதனாலயே மன்னனிடம் அந்த செங்கோல் வழங்கப்படுகிறது என்கிறார் வள்ளுவர்.

பாரதத்தில் நூற்றாண்டுகளாக நமது நீதி நூல்களும், இலக்கியங்களும் விதந்தோதிய வளையாத செங்கோலை அதன் தெய்வீகநெறி மாறாமல், இந்திய நாடாளுமன்றத்தில் நிறுவுவது மேன்மையே..

இன்றும், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் நாடாளுமன்றத்தில், பழம்பெருமை மிக்க செங்கோல்கள்,நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகரின் நடுவுநிலைக்கும், ஆட்சியின் அறத்திற்கும் சாட்சியாக அங்கே வைக்கப்பட்டுள்ளன..

இங்கிலாந்தில் நாடாளுமன்ற மேலவை என்பது, ‘பிரபுக்களின் அவை’ (house of lords). அங்கே குருதி வழி உரிமை கோரும் ராஜ குடும்பங்களும்,முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளும், அதை விட முக்கியமாக கிருஸ்தவ தேவாலய பாதிரிமார்களும் வீற்றிருக்கிறார்கள்..

இந்திய தேசத்தை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களுடைய மேலவையை நடத்தும் வழி, இப்படிப்பட்டதுதான் இன்றும்..

ஆனால் ஐரோப்பியர்கள் மதச்சார்பற்றவர்கள், உலகிற்கு நீதி சொல்பவர்கள் என்று, தங்கள் சொந்த அடையாளத்தை இந்தியத் தலைவர்களும் அவர்களின் கருத்தியலும் நம்மை சிதைத்த கொடூரம் சொல்லி மாளாது..

இதன் வீச்சை காங்கிரஸோ அல்லது நேருவோ அன்று உணரவில்லை.அவர்களுக்கு இந்திய பண்பாட்டின் மீதிருந்த கசப்புணர்ச்சியும், ஐரோப்பிய மோகமும் இந்த தேசத்தின் ஆன்மாவை சிதைத்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், அந்தச் செங்கோலே தனதாட்சியை நிலைநாட்ட வருகிறது என்பதை நம்புகிறேன். சிந்து சரஸ்வதி நாகரிகத்தில் தோற்றமளிக்கும் ரிஷப முத்திரை, இன்றும் நந்தியாக இந்தச் செங்கோலின் தலையில் வீற்றிருப்பது, அறுபடாத பல்லாயிரமாண்டு மரபை எடுத்துரைக்கிறது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...