ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம்

புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட்டது.

இதையடுத்து, இன்று (மே.,27)ம் தேதி, மத்தியகலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதினம், பிரதமர்மோடியிடம் செங்கோலை வழங்கினார்.

தொடர்ந்து, மதுரைஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் ஆகியோரிடம், பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

மதுரை, தருமபுர ஆதீனங்கள்இருவரும், ஆதினங்களின் நினைவு பரிசை வழங்கி, பிரதமருக்கு ஆசிவழங்கினர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் என் இல்லத்துக்கு வந்திருப்பது அதிர்ஷ்டம்.சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம்செய்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னமான செங்கோல், புதியபாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த செங்கோல், நாம் கடமையின் பாதையில் நடக்கவேண்டும், பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை, நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு புனிதசெங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தசெங்கோல் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக வைக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து, வெளியே கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...