ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம்

புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட்டது.

இதையடுத்து, இன்று (மே.,27)ம் தேதி, மத்தியகலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதினம், பிரதமர்மோடியிடம் செங்கோலை வழங்கினார்.

தொடர்ந்து, மதுரைஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் ஆகியோரிடம், பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

மதுரை, தருமபுர ஆதீனங்கள்இருவரும், ஆதினங்களின் நினைவு பரிசை வழங்கி, பிரதமருக்கு ஆசிவழங்கினர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் என் இல்லத்துக்கு வந்திருப்பது அதிர்ஷ்டம்.சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம்செய்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னமான செங்கோல், புதியபாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த செங்கோல், நாம் கடமையின் பாதையில் நடக்கவேண்டும், பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை, நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு புனிதசெங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தசெங்கோல் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக வைக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து, வெளியே கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...