ராகுல் காந்தி பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; நிதின்கட்காரி

உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அவரது பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பா.ஜ.க வின் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது

5 மாநில தேர்தலில் மணிப்பூர் தவிர மற்ற_மாநிலங்களில் காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவே ஏற்பட்டுள்ளது . உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். என்றாலும் தோல்வியை தழுவி இருக்கிறார். இதற்கு காரணம், மத்தியில் காங்கிரஸ்_ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள், விலைவாசி உயர்வு போன்றவை தான்.

உ.பி தேர்தல்_முடிவு, காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் நாங்கள் எதிர்பார்த்தபடி தேர்தல்முடிவு அமையவில்லை. பஞ்சாபில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம் . கோவாவில் பா.ஜனதா வெற்றிபெற்று இருக்கிறது. இங்கு பா.ஜனதா நிறுத்திய 7 கிறிஸ்தவ_வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் .

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். முந்திய ஆட்சியின் ஊழல் குற்றசெயல்களுக்கு மக்கள் சரியான_பாடம் புகட்டியுள்ளார்கள்.

உத்தரகாண்ட்டில் பா.ஜ.க தனித்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்கும். மொத்தத்தில் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது இவ்வாறு கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...