மதுரை ரிங்ரோடு, பாரதிய ஜனதா மாநில மாநாடுக்கான இறுதி கட்ட பணியில் ஆயிரகனக்க்கானோர் ஈடுபட்டு வருகின்றனர் . ஏப்., 26க்குள் (இன்றைக்குள்) அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையில், ஏப்.28, 29ல் நடக்கும் பாரதிய ஜனதா மாநில மாநாட்டுக்காக ( தாமரை சங்கமம்) பிரமாண்ட ஏற்பாடுகள் கடந்த_மாதம், 23 தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ளும் 31மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுகான உணவுக்கூடங்கள், குழாய்கள் பொருத்தும்பணி நடைபெற்று வருகிறது .
கோவையில் இருந்து லாரிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வந்து சேர்ந்தன. இன்றைக்குள் அவை பொருத்தபட்டு விடும். பந்தலின் உட்புற மேற் கூரையில் அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது . ஒரு லட்சம் தொண்டர்கள் அமரும்வகையில் சேர்கள் போடபடுகின்றன . ஆறாயிரம் விளக்குகள் மற்றும் நாலாயிரம் மின் விசிறிகள், பொருத்தபடுகின்றன.
கழிப்பறைகள் மட்டும் 600 அமைக்கபடுகின்றன. மாநாட்டு முகப்பில் சிங்கம் , மயில் அலங்காரம்கொண்ட தூண்கள் வைக்கபடுகின்றன. இவைகளுக்கு வர்ணம் தீட்டும்பணி, நடைபெற்று வருகிறது.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.