மூன்று ஆண்டுகளில் கட்சி பொறுப்பில் இருந்து கூடுதல்பணி செய்ய காலம் போததாலும், தற்போதைய பா,ஜ,க தேசிய தலைவர் கட்காரியின் பணி மிகசெம்மையாக இருந்ததாலும் இவரையே மீண்டும் ஒருமுறை பா.ஜ.,வின் தேசிய தலைவராக்க பா.ஜ.,க பரிசிலிக்க முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் டில்லியில் நடைபெற்றது . இதில்_வரும் டிசம்பர் மாதம் பதவி காலம் முடியவிருக்கும் தலைவர் பதவிகுறித்து விவாதிக்கப்பட்டது. கட்காரியே மீண்டும் தலைவராகக்கிட பரிசிலிக்க பட்டது .
இது குறித்து கட்சியின் பொது செயலர் ராம்லால் தெரிவித்ததாவது ; கட்காரிக்கு பா,ஜ,க தலைவர் பொறுப்பை மீண்டும்_வழங்கிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கபட்டது . இதுதொடர்பா வரும் மே மாதம் 24 , 25 தேதிகளில் நடக்கவுள்ள தேசிய செயற் குழு கூட்டத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். மூன்று ஆண்டுகாலம் கட்சி பணியாற்றுவதுதான் பாரதிய ஜனதா சட்டத்தில் இருக்கிறது . எனவே சட்டதிருத்தத்திற்கு செயற்குழு ஒப்புதல்தேவை. இதன்மூலம் மேலும் கட்காரியின்_பணி கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இது வரை அத்வானி மட்டும் இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்திருக்கிறார் . அவருக்கு அடுத்து இரண்டு முறை தலைவர்பதவியில் இருந்தவர் என்ற பெருமை கட்காரிக்கு கிடைக்க உள்ளது .
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.