நாகையில் பாரதிய ஜனதா மாநில செயற் குழு உறுப்பினர் புகழேந்தி மர்மநபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகைக்கு வந்தார்.
அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது; அரசியல் கொலைகள் தமிழகத்தில் வர வர அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலையில் நடை பயணம் செய்யும்போது இது மாதிரி கொலைகள் தொடர்ந்து நடந் தேறி வருகிறது. இந்தவிஷயத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமால் தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டும் என கூறினார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.