உ. பி யில் மொத்தம் 12 மாநகரங்களுக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் 10-ல் பாரதிய ஜனதா வென்றுள்ளது.
“”சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்தபோதிலும், மேயர் தேர்தலில் கட்சிச் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்தோம்.
தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்பின் காரணமாக பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்” என அம் மாநில பாரதிய ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் தெரிவித்தார் .
லக்னெü, அலிகார், மொராதாபாத், கான்பூர், காஜியாபாத், ஜான்ஸி, கோரக்பூர், மீரட், ஆக்ரா மாநகரங்களின் மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. கடந்த சட்ட பேரவைத் தேர்தலில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்த பாரதிய ஜனதா இப்போது மேயர் தேர்தலில் அமோக வெற்றிபெற்று தனது செல்வாக்கை நிருபித்துள்ளது .
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.