உலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது?

 காலையில் கண்ணை கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒருகாபியை சிபாரிசு செய்கிறார்கள்;

மட்டமத் தியானம் டி.வி.யைப்போட்டால் 'மேனேஜர்' கிருஷ்ண மூர்த்தி,டெல்லி கணேஷ், 'ஹோம் ஸ்வீட்ஹோம்' திவ்யதர்ஷினி

யெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்றுகொண்டு ப்ளாட் வாங்கச்சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்.

சாயங் காலமாக புதுப் படம் போடுகிற சாக்கில்,10 நிமிஷத்துக்கு ஒரு தடவை மூன்று விஜய் மொபைலில்பேசி, சரத்குமார் வேட்டிகட்டி நடந்து, தனுஷீம் விமலும்ஹேர் ஆயில் தடவி, அஞ்சலியும் தமன்னாவும் குத்துடான்ஸ் ஆடி, 'ஏண்டா வூட்ல இருக்கீங்க? ஷாப்பிங் போங்கடா'என வேப்பிலை அடிக்கிறார்கள். (பழமொழியை மாத்துங்கப்பா! கோக் அடிக்கிறார்கள்)

நடு  நடுவே 'புரட்சிப்போராட்டம்' என பிரபு நகைக்கடைக்குப் பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா, பகத் சிங்குக்கு எல்லாம் டவுசர்கிழிகிறது.

ஊரே தூங்குகிற மிட் நைட்டில் பார்த்தால் தாடைவீங்கிய சஃபாரிபார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துகொண்டு இருக்கிறார்.

இன்னொரு சேனலில் ஒருகொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் 'இதாங்க அமுக்ரா லேகியம். . .' என கடுப்ப டிக்கிறார்கள்.

பின்னிரவுக்கு பின்னும் ஒரு வெள்ளைக் காரிக்கு சிந்தாதிரிப் பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு வீட்டுப் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தொப்பையை குறைக்க டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உச்ச கட்டமாக சிட்டி முழுக்க 'சினேகா பிரசன்னா பிரிவுக்கு என்னகாரணம். . .?' என போஸ்டர் அடித்து ஒட்டி யிருந்தார்கள்.

நன்றி: நமது நலனிலும், நாட்டு நலனிலும், தமிழர்களின் நலனிலும் அக் கறையாக இருக்கும் ஆனந்த விகடன், பக்கம் 56 ,வெளியீடு1.8.12

நீங்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்:மனோதத்துவம் சொல்லுவது என்னவெனில்,நமது ஐம்புலன்களான கண்,காது,மூக்கு,சுவை,தொடு உணர்வு இவைகளில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்.இவை இரண்டையும் கட்டுப்படுத்திட தெரிந்து கொண்டால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்;

அதே சமயம் இந்த இரண்டையும் குறி வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களே திரைப்படமும்,டிவியும்.நம்மை அடிமுட்டாளாக்குவதில் எப்படி வெற்றி பெற்று,கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு கோடி சம்பளம் வாங்கும் கார்த்தி,ஒரு காபியையா வாங்கும்படி நம்மை நச்சரிப்பது?

சொந்த ஊரில் நிலம் வாங்கினாலே அதில் ஏமாறாமல் வாங்கிட நமக்கு ஆயிரம் சாணக்கியத்தனம் தேவைப்படுகிறது.இதில் செங்கல் பட்டில் வாங்கி,(விவேக் நடித்த செங்கல்பட்டு,செங்கல்பட்டு காமெடி நினைவுக்கு வருகிறதா?)

ஏன் ஒரு விஜய் விளம்பரத்தில் நடித்தால் செல்போன் வாங்க மாட்டோமா? எதற்கு மூன்று விஜய்? நம்மை நாகரீகக்கோமாளியாக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்றோ?

கேரளாவில் கம்யூனிஸ ஆட்சிகளே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன;நகைக்கடை வைத்திருப்பவர் அங்கே போய் புரட்சிப் போராட்டம் என்று விளம்பரப்படுத்த வேண்டியது தானே? ஓ! கேரளாவில் புரட்சி செய்து முடிச்சாச்சு;அது சரி,புரட்சிக்கும் தங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெண்களின் உடல்வாகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமைந்திருக்கும்;அதை ஓரளவுக்கு மேல் மாற்றிடவே முடியாது;ஆனாலும்,அமெரிக்கத் தயாரிப்புகள் நமது தலையில் மிளகாய் இல்லை;இல்லை;சில்லி அரைத்துக்கொண்டு,இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.நாம் இன்னுமா ஏமாறுவது?

சினேகா பிரசன்னா கல்யாணச் செய்தியே நமக்குத் தேவையில்லாத விஷயம்.இதுல இவங்க பிரிஞ்சா இலங்கைத் தமிழர் பிரச்னை தீரவா போகுது?

இப்படிக்கு கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...