பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , குறிப்பாக நாட்டில் உருவாகும் மிகப்பெரிய ஊழல் மற்றும்

முறைகேடுகள், இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் ஜே.பி.சி அமைக்கப்படுவது பார்லிமென்ட்-நடைமுறையில் வழக்கமானதாக இருந்து வந்துள்ளத,

பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களை கொண்டு அமைக்கப்படுவது பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆகும் . பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில் , விகிதாசாரத்தின்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் எம்.பி.,க்கள் இடம்பெறுவர். லோக்சபாவிலிருந்து 30 எம்.பி.களும், ராஜ்யசபாவிலிருந்து `10 எம்.பி.,க்களும் இதில் இடம்பெற முடியும். மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் , அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்பு கொள்ள வேண்டும் ,

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி)

நம் நாட்டில் முதல் முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு நாட்டின் மிக பெரிய ஊழலாக joint parliamentary committee tamilகருதப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த 1987 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ஜே பி சி. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் அலுவல்களை பலநாட்கள் ஸ்தம்பிக்க செய்தன போர் கொடி தூக்கின. மேலும், அப்போதைய மத்தியநிதி அமைச்சரக இருந்த வி.பி.சிங், ஜே பி சி., அமைக்க வலியுறுத்தி எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்பு கொண்டது தனிக்கதை .

1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் 1,000 கோடிரூபாய் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

1999 முதல் 2001 ம் ஆண்டு வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி ஊழல் செய்த கேதன் பரேக்கின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த முன்றாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த நான்காவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...