பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , குறிப்பாக நாட்டில் உருவாகும் மிகப்பெரிய ஊழல் மற்றும்

முறைகேடுகள், இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் ஜே.பி.சி அமைக்கப்படுவது பார்லிமென்ட்-நடைமுறையில் வழக்கமானதாக இருந்து வந்துள்ளத,

பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களை கொண்டு அமைக்கப்படுவது பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆகும் . பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில் , விகிதாசாரத்தின்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் எம்.பி.,க்கள் இடம்பெறுவர். லோக்சபாவிலிருந்து 30 எம்.பி.களும், ராஜ்யசபாவிலிருந்து `10 எம்.பி.,க்களும் இதில் இடம்பெற முடியும். மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் , அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்பு கொள்ள வேண்டும் ,

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி)

நம் நாட்டில் முதல் முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு நாட்டின் மிக பெரிய ஊழலாக joint parliamentary committee tamilகருதப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த 1987 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ஜே பி சி. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் அலுவல்களை பலநாட்கள் ஸ்தம்பிக்க செய்தன போர் கொடி தூக்கின. மேலும், அப்போதைய மத்தியநிதி அமைச்சரக இருந்த வி.பி.சிங், ஜே பி சி., அமைக்க வலியுறுத்தி எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்பு கொண்டது தனிக்கதை .

1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் 1,000 கோடிரூபாய் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

1999 முதல் 2001 ம் ஆண்டு வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி ஊழல் செய்த கேதன் பரேக்கின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த முன்றாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த நான்காவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...