வியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர்

வியாபாரத்தை  செழிக்க வைக்கும்  ஸ்ரீ வியாபார விநாயகர்  அடேங்கப்பா… ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்கு த்தான் எத்தனை எத்தனைத் திரு நாமங்கள்! மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் பிள்ளையார், ஸ்ரீ வியாபார விநாயகர் என்று அன்புடன் அழைக்கின்றனர் பக்தர்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ. தொலைவில் இருக்கிறது கீழ மாசி வீதி. இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில், வெகுபிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட அழகிய ஆலயம் இது.

மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்தபிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை ஸ்ரீ வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக் கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்துக்கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினானாம். பிறகு சிவனாரின்_பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதேஇடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான் என்கிறது கோவிலின் ஸ்தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்று கின்றனர் பக்தர்கள்.

புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்தப் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் அன்பர்கள், தினமும் மொட்டை விநாயகரைத் தரிசித்த பின்னரே கடை திறப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் விநாயகரைத் தரிசித்து, தோப்புக்கரணமிட்டு வேண்டிச் செல்கின்றனர். தேர்வு நாளில், இவரின் திருவடியில் பேனாவை வைத்து வேண்டிக்கொண்டால், ஜெயம் நிச்சயம் எனச் சொல்லி மகிழ்கின்றனர் மாணவர்கள்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு வந்து விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்தும், அபிஷேகம் செய்தும் தரிசித்துச் செல்கின்றனர்.

One response to “வியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...