பிரதமர் தவறான தகவல்களையே குறிப்பிட்டு வருகிறார்

 பிரதமர் தவறான தகவல்களையே குறிப்பிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வெளி நாட்டுப் பயண விஷயத்தில் தவறான தகவல்களையே பிரதமர் குறிப்பிட்டு வருவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜாம் நகரில் வெள்ளிக் கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் தெரிவித்ததாவது ; : ஹிசார் நகரைச்சேர்ந்த ரமேஷ் சர்மா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்திய தூதரகங்களில் இருந்து சோனியாவின் வெளி நாட்டுப் பயணம் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார். இதன் படி, அவரது வெளி நாட்டுப் பயணங்களுக்கு அரசு பலலட்சங்களை செலவுசெய்தது தெரியவந்துள்ளது.

உதாரணத்துக்கு கடந்த 2007 மற்றும் 2011-ல் சோனியா லண்டனுக்கு பயணம் செய்தபோது முறையே ரூ.2.82 லட்சம் மற்றும் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது . இதைபோன்று சீனாவுக்கு இரண்டு முறை பயணம் மேற்க்கொண்டதில் முறையே ரூ.14 லட்சமும், ரூ.12 லட்சமும் அரசு செலவுசெய்துள்ளது தெரியவருகிறது . அதே நேரம், சோனியாவின் மருத்துவச்செலவு பற்றிய விவரங்களை ரமேஷ்சர்மா கோரவில்லை என்றார் மோடி.

ஆனால், சோனியாவின் வெளி நாட்டு பயணத்துக்கு வெறும் மூன்று லட்சம் மட்டுமே அரசு செலவு செய்திருப்பதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்காக அரசு செலவுசெய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...