பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்படும்

பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்படும்  பா.ஜ.க. மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்கு நாட்டின் சர்வதேச எல்லைகளை, “சீல்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர், நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

இந்திய – சீன போரின், 50 ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு , அசாம் மாநிலம் கவுகாத்தியில், பா.ஜ.க நேற்று பேரணியை தொடங்கியது இதை துவங்கி வைத்து கட்காரி பேசியதாவது: ஒருவர் எந்த ஒருநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும் , விசா உள்ளிட்ட பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் . ஆனால் நமது_நாட்டின் சர்வதேச எல்லைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அண்டை நாடுகளிலிருந்து, ஏராளமானோர் சட்டவிரோதமாக, நம் நாட்டிற்குள் ஊடுருவி, நிலம் , சொத்துக்கள் போன்றவற்றை வாங்குகின்றனர். சட்டவிரோதமாக வந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்தால் , காங்கிரஸ் அரசு, அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. “நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம்; உங்களுக்கு வேண்டியதை செய்துதருகிறோம்; ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு விடுங்கள்’ என கூறி, அவர்களை வரவேற்கிறது. சட்டவிரோத ஊடுருவல், நாட்டின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஓட்டுவங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் இதை ஆதரிக்கிறது.

நமது எல்லை பகுதிகள் எல்லாம், பாதுகாப் பாற்ற நிலையில் உள்ளன. 1962, இந்திய – சீன போரின்போது இருந்த, குறைபாடுகள் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோன்ற தவறுகள், மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அசாமின் தற்போதைய காங்கிரஸ் முதல்வர், தருண்கோகோய் உள்ளிட்ட , இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், சட்டவிரோத ஊடுருவலை ஆதரிக்கின்றனர்.

பா.ஜ.க, மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்கு , சர்வதேச எல்லைகளை, “சீல்_வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . தன்னை சுற்றி உள்ள அண்டை நாடுகள் எல்லாம், பகைநாடுகளாக உள்ளதால் , இஸ்ரேல் தங்கள்நாட்டின் எல்லைகளை எல்லாம், “சீல்’ வைத்துள்ளது. அதே போன்று , நாமும் செய்யவேண்டும். என்று கட்காரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...