உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தார்மீகதின் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என பாரதிய ஜனதா சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறியது: அரசியலமைப்பு பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளமுடியாது என்பதால், அகிலேஷ் பதவி விலகவேண்டும்.
முதல்வராக இருந்துகொண்டு, எப்படி அவரால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்? இது குறித்து சிபிஐ அலுவலகத்துக்கு எப்படி அவரால் செல்லமுடியும்?
ஐ.மு., கூட்டணி அரசு, அகிலேஷுக்கு எதிராக சி.பி.,ஐயை அரசியல் கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க நீதிமன்ற கண்காணிப்பு அவசியம்.
பாரதிய ஜனதா தலைவர்களான எல்கே அத்வானி, மதன்லால் குரானா உள்ளிட்டோர் தங்களின் மீது ஹவாலா மோசடிவழக்கு தொடரப்பட்டவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தங்கள் பதவியை ராஜிநாமாசெய்ததை, அகிலேஷ் உதாரணமாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்றார்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.