வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 3

  வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம்  3 "காலியோ" ,"லாவோ" என்ற பெயருடைய இரண்டு கப்பல்கள் வாங்குவதில் வெற்றிபெற்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையை தேசியப் பத்திரிகைகள் வானளாவி புகழ்ந்து தள்ளின, என்று எனது முந்தைய பதிவுகளில் பார்த்தோம், இனி அது எவ்வாறு என்று பார்ப்போம்.

பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே வந்தேமாதரம் எனும் மந்திர சொல் பொறித்தக்கொடியுடன் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தினை அணுகுவது போலவும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூடி "வீரச்சிதம்பரம் வாழ்க" எனக் கோஷித்துக் கப்பல்களை வரவேற்பது போலவும், கார்ட்டூன் வெளியிடப்பட்டது.

சுதேசிக்கப்பல்களை வரவேற்று பாரதியார் எழுதியது பின்வருமாறு,
"வெகுகாலம் புத்திரப்பேறின்றி அருந்தவம் செய்து வந்தப்பெண்ணொருத்தி இரண்டு புத்திரர்களைப் பெற்றால் அவள் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைவாளோ அந்த அளவிற்கு ஆனந்தத்தினை இன்று நம் பாரதத்தாய் அடைந்திருக்கிறாள்.

வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் தாம் பிறந்து வளர்ந்த பாரதத்தாய்நாட்டிற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டார்கள்."

பாரதி சுதேசிக்கப்பல்களை வரவேற்றாலும் அவற்றிற்கு தரப்பட்ட பெயர்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இது பற்றி பாரதியே பேசுகிறார்.

"இந்தக்கப்பல்களுக்கு இப்போது கொடுக்கப்பட்ட பெயர்கள் எப்போதும் இருப்பனவா?இல்லை சுதேசி இயக்கத்திற்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படுமா? நம் கொள்கைகளுக்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படவேண்டும் என்றே எண்ணுகிறோம்." என்று கூறி சில சுதேசிப் பெயர்களையும் சிபாரிசு செய்தார்,
(ஆதாரம் இந்தியா, ஆனி 1907)

இந்த சூழலில்தான் இந்திய தேசியக் காங்கிரஸின் மாநாடு சூரத்தில் நடக்க இருந்தது, பாலகங்காதர திலகர் இந்த மாநாட்டிற்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாரதியார், உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்,

தொடரும……….,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...