மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன

மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன மத்திய அரசின் பல வீனமான கொள்கைகளாலும் மோசமான தலைமையினாலும் நாட்டின் வளர்ச்சி முடங்கி விட்டது மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் சோர்வு மனப் பான்மையாலும் அலட்சியத்தாலும் நாடு பெரும்பொருளாதார சிக்கலை எதிர் கொண்டுள்ளது.

மொத்த உள் நாட்டு உற்பத்தி இலக்கை 9 சதவீதமாக நிர்ணயித்தால் மட்டும்போதாது; அந்த இலக்கை எட்ட உறுதியான அரசியல்நிலைப்பாடு தேவை.

நாட்டின் மந்தமான வளர்ச்சிக்கு காரணம் கேட்டால் சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு காரணம் காட்டுகிறது. அப்படி என்றால் மாநிலங்களின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்டால் யாரை காரணம் காட்டுவது?

மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ் நிலையிலும் குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்கள் நல்ல வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகின்றன.

நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் இளைஞர்கள் தான்; அவர்களின் ஆற்றலை பயன் படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்களை தீட்டி அதன்மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெருக்கலாம்.

குஜராத்தை முன் மாதிரியாகக் கொண்டு, அதன்படி மற்ற மாநிலங்களும் வளர்ச்சித்திட்டங்களை வகுக்க திட்டக்கமிஷன் அறிவுறுத்தவேண்டும்.

சீரான சதவீதத்தில் நாட்டின் வளர்ச்சியை உயர்த்த தேசியவள ஆணையம் ஒன்றை உருவாக்கவேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஐந்தாண்டுகளுக்கு தேவையான அத்தியாவசியான மானியங்களை உரியசதவீதத்தில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...