மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன

மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன மத்திய அரசின் பல வீனமான கொள்கைகளாலும் மோசமான தலைமையினாலும் நாட்டின் வளர்ச்சி முடங்கி விட்டது மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் சோர்வு மனப் பான்மையாலும் அலட்சியத்தாலும் நாடு பெரும்பொருளாதார சிக்கலை எதிர் கொண்டுள்ளது.

மொத்த உள் நாட்டு உற்பத்தி இலக்கை 9 சதவீதமாக நிர்ணயித்தால் மட்டும்போதாது; அந்த இலக்கை எட்ட உறுதியான அரசியல்நிலைப்பாடு தேவை.

நாட்டின் மந்தமான வளர்ச்சிக்கு காரணம் கேட்டால் சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு காரணம் காட்டுகிறது. அப்படி என்றால் மாநிலங்களின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்டால் யாரை காரணம் காட்டுவது?

மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ் நிலையிலும் குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்கள் நல்ல வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகின்றன.

நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் இளைஞர்கள் தான்; அவர்களின் ஆற்றலை பயன் படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்களை தீட்டி அதன்மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெருக்கலாம்.

குஜராத்தை முன் மாதிரியாகக் கொண்டு, அதன்படி மற்ற மாநிலங்களும் வளர்ச்சித்திட்டங்களை வகுக்க திட்டக்கமிஷன் அறிவுறுத்தவேண்டும்.

சீரான சதவீதத்தில் நாட்டின் வளர்ச்சியை உயர்த்த தேசியவள ஆணையம் ஒன்றை உருவாக்கவேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஐந்தாண்டுகளுக்கு தேவையான அத்தியாவசியான மானியங்களை உரியசதவீதத்தில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...