பாஜக தமிழக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டர். தமிழக பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தேர்தல் மற்றும் பொது குழு உறுப்பினர் தேர்தல் பூந்தமல்லி ராணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக அகில இந்திய இணைஅமைப்பு பொதுசெயலாளர் சதீஷ், தமிழக தேர்தல் அதிகாரி
பண்டாரு தத்தாத் ரேயா, அகில இந்திய செயலாளர் முரளிதர் ராவ் உளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்செய்தார். அவரை எதிர்த்து யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்செய்யவில்லை. அதனால், பா.ஜ.க மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில் மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன ராஜுலு, பொதுச் செயலாளர்கள் ரமேஷ், நாகராஜன், துணை தலைவர்கள் ராமலிங்கம், திருமலை, எச்.ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உட்பட மாநிலத்தில் இருக்கும் அனைத்து அணிபிரிவு தலைவர்களும் பங்கேற்றனர்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.