தகுதியற்றவர்கள் ஆட்சியில் டெல்லி சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது

தகுதியற்றவர்கள் ஆட்சியில்   டெல்லி   சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது தகுதியற்றவர்கள் ஆட்சியிலிருக்கிற போது எந்த கடுமையான சட்டங்களாலும் டெல்லி சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது தொடரவே செய்யும் என்று தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஆட்சியில் தகுதியற்ற வர்கள் இருக்கிற போது எந்த கடுமையான சட்டங்கள் வந்தாலும் டெல்லி சம்பவம்போன்ற சம்பவங்கள் தொடரும்.டில்லி மருத்துகல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொடுரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு பலன் இன்றி மரணம் அடைந்தார்.இம்மாணவியின் மரணம் உலக அளவில் மானுடம் நேசிக்கும் அனைவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஐக்கிய நாட்டு சபை பொதுசெயலாளர் பான்கிமுன் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் மக்கள் போராட்டம் நடத்தினர் .சாத்வீகமுறையில் நடத்திய போராட்டத்தை மத்தியஅரசால் தாங்கமுடியாத நிலையில் தோற்கடிக்க பலமுயற்சி நடந்தது.

தற்போது இந்த பழியில் இருந்து விடுபடமுயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறுகிறது. ஆனால் எத்தனை சட்டம் இயற்றினாலும் ஏட்டில் தான் இருக்குமே தவிர எந்த பலனும் இல்லை. இதனை நாடு கண்டுகொண்டுள்ளது. தினமும் பாலியல் பலத்காரம், கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

மேற்கு வங்க மாநில முதல்வர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த அரசால் எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் அதனை தடுக்க முடியாது. சட்டத்தை முறையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை இல்லை.
குஜராத் மாநிலத்தில் மோடி பதவி ஏற்கும் முன் ஊரடங்கு பல காலங்களில் அமல் படுத்தப்பட்டது. ஆனால் அவர் பதவியேற்றது முதல் இன்று வரை ஊரடங்கு எந்த பகுதியிலும் இல்லை. கலவரங்கள் இல்லை. ஊரடங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. உலகநாடுகள் இந்திவை ஏளனமாக பார்க்கிறது. சிறு நாடான இலங்கை கூட இந்தியா நாட்டைமதிக்கவில்லை. தினமும் மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கையை தடுக்க முடியவில்லை. அமைச்சரவையில் முடிவெடுக்கமுடியவில்லை. 9 ஆண்டுகளாக இதே நிலையில் பிரதமர் உள்ளார். 1000 கோடி இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது முறையாக வழங்கவில்லை இதனை கேட்க நாதியில்லை. இந்த நிலையில் புதிய சட்டம் கொண்டு வந்தாலும் பலன் இல்லை. மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் சட்டத்தை மதித்து துணிச்சலாக முடிவெடுக்கும் மத்திய அரசு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. தமிழகத்தில் நிலை நாளுக்குநாள் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அனைத்து மக்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். மேல், கீழ் சாதி என பிரித்து அனைவரும் சமம் என கருதும் நிலை வரவேண்டும்.
தர்மபுரியில் நடந்த சம்பவம் திட்டமிட்ட மிகபெரிய கலவரம். பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,

வரும் பிப்., மார்ச்சில் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக பாதை யாத்திரை நடத்த உள்ளோம். காவிரி சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் கெஜட்டில் வெளியிடவேண்டும். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளளது.

தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்க காங் தயாராக உள்ளது. தமிழர்களை கொன்று குவித்து வரும் வேளையில் 2009ல் தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தமிழகத்திற்கு தரமாட்டோம் என கூறுவர். ஆனால் தமிழகத்தில் கூட்டணி அமைப்பர். மாற்றந்தாய் மனபோக்குடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.
மீனவர்கள் மீது நடத்தபடும் தாக்குதலை கண்டித்து பா,ஜ., போராட்டம் நடத்தும்.

இவ்வாறு பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.
நகராட்சி சேர்மன் மீனாதேவ், கோட்ட இணை பொறுப்பாளர் வேல்பாண்டியன், மாவட்ட செயலாளர் தேவ், பொருளாளர் முத்துராமன், நகர தலைவர் ராகவன், முன்னாள் நகர தலைவர்ராஜன், மாவட்ட பிரதிநிதி அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...