ஒருநாள் கேத்ரி மன்னரின் அரச சபையில் நடனமாது ஒருத்தியின் சங்கீத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளுமாறு விவேகானந்தரை அழைத்தார் மன்னன் அதற்கு அவர்,தாம் ஒரு துறவி இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கில்லை என்று கூரிவிட்டார் .இந்தச் செய்தி எப்படியோ அந்த நடன மாதிற்கு எட்டியது
.ஒரு மகான் என்று பிரபலமடைந்த விவேகானந்தார் ,தமது சங்கீத நிகழ்ச்சிக்கு வர மறுத்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பெண் மிகுந்த வேதனைக்கு உள்ளானாள் .அவள் செய்வதற்கு எதுவுமில்லை. இருப்பினும் தனது மனவேதனையை விவேகானந்தரிடம் எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள் .
சங்கீத நிகழ்ச்சி தொடங்கியது .அவள் பாடியது சூர்தாசரின் ஓர் அருமையான பாடல் :
பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளதே
சமபாவனை உனது பண்பல்லவா ?-நீ
திருவுளம் கொண்டால் என்னைக் கரை சேர்ப்பாய் !
வழிபாடும் சிலையாய் எழுந்தருளுவதும்
கத்தியாக உயிரை வகைத்து மாய்ப்பதும்
ஒரே இரும்பு என்பதே உண்மை;
பரிசமணியால் தொட்டால் இரண்டும்
ஒருபோல் பொன்னாக ஆவதும் உண்மை .
பரிசமணியின் மனத்தில் வேற்றுமை உணர்வு தகுமா ,
அது அழகா ?…….
அருகிலுள்ள அறையில் தான் விவேகானந்தரின் தங்கி இருந்தார் .இந்த பாடலின் ஆழ்ந்த கருத்து அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது .
'இது தான் என் துறவு நிலையா ? நான் ஒரு துறவி வேற்றுமை காணும் மனம் என்னிடம் இருப்பது தகுமா? எங்கும் இருப்பது இறைவன் என்றால் , அந்த அனுபூதி எங்கும் இருப்பது உண்மை என்றால் நான் யாரையும் ஒதுக்கக்கூடாது .'-இத்தகைய முடிவுக்கு வந்த விவேகனந்தர் உடனடியாகச் சென்று சிங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.