அன்றைய திருடன் இன்றைய தபஸ்வி

அன்றைய திருடன் இன்றைய தபஸ்வி  இமயமலைப் பகுதிகளில் சுவாமிஜி மகான் ஒருவரை சந்திக்க நேர்ந்தது .அவர் ஆன்மீக சாதனைகளில் உயர்நிலைகளை எட்டியவர் என்பதை புரிந்து கொண்டார் சுவாமிஜி . அவரோடு தமது பரிவராஜகப் பயணத்தைப் பற்றிக் கூறி தாம் காஸ்ப்பூரில் பவஹாரி பாபா என்ற மஹானை சந்திக்க போவதாக கூறினார் .

உடனே அந்த தபஸ்வி "ஆமாம் நான் கூட அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் "என்றார் .சுவாமிஜி பவஹாரி பாபாவின் உயர்வைப் பற்றி யச் சம்பவத்தைக் குறிப்பிட்டார் .

"ஒருநாள் பவஹாரி பாபாவின் ஆசிரமத்தில் ,ஒரு திருடன் திருட முயன்றான் . பொருட்களை எடுத்துக் கொண்டு நழுவ முயன்றான் உறங்கி கொண்டிருந்த பாபா விழித்துக் கொண்டு விட்டார் . அதனால் பதட்டப்பட்ட திருடன் பொருட்களை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தான் . பாபா அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து ஓடினார் .

ஒடிக் களைத்த திருடன் ஓரிடத்தில் நின்றான் . துரத்தி வந்த பாபா அந்தப் பொருட்களை அவனிடம் தந்து "நாராயண இவையெல்லாம் தங்களுடையவை . எடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்போடு சொன்ன பாபா திரும்பி வந்த வழியே சென்று விட்டார் . பாபா கூறியதை நம்ப இயலாத திருடன் பிரமிப்புடன் பார்த்தான் . தன்னிடத்தில் திருடிய பொருட்களைக் கூடத் திருடனைத் துரத்திப் போய் அவனிடம் தந்த அற்புத மனிதர் பாபா "என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார் சுவாமிஜி .

அப்போது அந்த மகான் கண்களில் நீர் கசிந்தது."நீங்கள் கூறிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த திருடன் நான்தான் சுவாமிஜி "என்று அந்த மகான் கூறியதும் சுவாமிஜி திகைத்து போனார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...