வருமான வரித் துறையினரின் நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க ,, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .
கட்காரிக்கு சொந்தமான புர்திநிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து கட்காரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து பா.ஜ.க, தலைவர் கட்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; இந்தசோதனை அரசியல் ரீதியாக என்னை மிரட்டுவதற்கும், என்னை மனவேதனை அடையசெய்வதற்கும் நடத்தப்பட்டது. இதை போன்ற செயல்களால் தேசத்திற்கு நான் ஆற்றக் கூடிய பணிகளிலிருந்து திசை திருப்பிவிடமுடியாது. 2வது முறையாக தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ள நிலையில், வருமான வரித் துறையினரின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று கூறியுள்ளார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.