விஸ்வரூபம் தடை பிற சமுதாயத்தவரும் இதைப்போன்று கேட்கும்நிலை உருவாகும்

விஸ்வரூபம் தடை  பிற சமுதாயத்தவரும் இதைப்போன்று கேட்கும்நிலை உருவாகும்  விஸ்வரூபம் தடையை நியாயப்படுத்தினால் பிற சமுதாயத்த வரும் இதைப்போன்று கேட்கும்நிலை உருவாகும், கலவரத்தை கையில் எடுக்கும் ஒருசிலருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து தஞ்சையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது;

விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் விலக்கிய பிறகும் அந்த திரைப்படம் திரையிட இருந்த திரை அரங்குகளின் மீது தாக்குதல்நடத்தி பொது அமைதிக்கு பங்கம்விளைவிக்கும் வகையில் செயல் பட்டவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தாதது கண்டனதுக்குரியது.

இத்திரைப் படத்தை திரையிடவேண்டாம் என அரசு அதிகாரிகள் திரையரங்க உரிமையாளர்களை கேட்டுக்கொண்டதாக வரும்செய்திகள் வருத்தத்திற்கு உரியது.

மதசார்பற்ற ஒருமாநிலத்தில் குடியேற விரும்புகிறேன். காஷ்மீர் முதல் கேரளம்வரை மதசார்பற்ற இடம் கிடைக்கா விட்டால் வேறு ஒரு நாட்டிற்கு குடிபெயர விரும்புகிறேன் என்ற கமலஹாசனின் கருத்து தமிழகத்தையும் இந்திய நாட்டையும் அவமதிக்கும்செயல் என கருதுகிறேன்.

கமலஹாசனின் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழகத்தில் மதஒற்றுமையை விரும்புவோர் வாழமுடியாது என்பது போன்றும் தமிழகத்திலும் இந்தியாவிலும் மததுவேசம் நிறைந்திருப்பது போன்றும் மதபயங்கரவாதிகள் இங்கு கோலோச்சுவதை போன்றும், நமது நாடு ஒருகுறிப்பிட்ட மதத்திற்கான மதசார்புள்ள நாடாக மாறியிருப்பது போன்ற தோற்றத்தை தந்துள்ளது . கமலஹாசனின் இந்தக்கருத்து மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே கமலஹாசன் தனது இந்தக்கருத்தை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மூலம் ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயம் இத்திரைப்படத்தை எதிர்ப்பதுபோன்றும் ஒரு தோற்றத்தை கொடுக்கமுயற்சிப்பது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் கலவர சூழ்நிலையை உருவாக்க ஒருதிரைப்படத்தை ஒருகாரணமாக காட்டமுயலும், எந்த தரப்பினை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை அடக்கி கடும்நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை.

இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கத்திற்கும் உரியபாதுகாப்பை தந்து சட்ட ஒழுங்கை பாதுகாக்கும்பொறுப்பு தமிழக அரசை சார்ந்தது. ஆனால் ஒருசிலர் தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக லட்சக் கணக்கான ரசிகர்களின் திரைப்படம் பார்க்கும் உரிமையை தடைசெய்து திரைப்படத்திற்கு மீண்டும் தடைஉத்தரவு பெறுவது கலவரத்தை கையில் எடுக்கும் ஒருசிலருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது.

தமிழக அரசு இந்தநிலையை நியாயப்படுத்தினால் அது பிறசமுதாயத்தை சார்ந்தவர்களுக்கும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிறுபொறியாக உருவாக்கப்பட்டுள்ள இக்கலவரம் காட்டுத்தீயாக மாறாமல் தடுக்கும் கடமையை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...