மோடி குறித்து கட்ஜுவின் கருத்து பகைமைகொண்டு விமர்சிப்பதாக இருக்கிறது

மோடி குறித்து கட்ஜுவின் கருத்து பகைமைகொண்டு விமர்சிப்பதாக இருக்கிறது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விமர்சித்து பத்திரிகையில் கட்டுரை எழுதிய இந்திய பிரஸ்கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவை பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“கோத்ராவில் நிகழ்ந்த சம்பவம் இப்போதும் மர்மமாகவே இருக்கிறது ‘, “2002-ம் வருடம் நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப்பங்கும் இல்லை என கூறுவது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது ‘ என்று குஜராத்த்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து எழுதிய கட்டுரையில் மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண்ஜேட்லி, “மோடி குறித்து கட்ஜு எழுதியிருக்கும் கட்டுரை தனிப்பட்டமுறையில் பகைமைகொண்டு விமர்சிப்பதாக இருக்கிறது.

இந்திய பிரஸ்கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து கட்ஜு உடனடியாக விலகவேண்டும். அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அந்த கட்சியை சேர்ந்தவர்களையும் விட அதிகவிசுவாசமாக செயல்படுகிறார்.

காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும்_மாநிலங்களான குஜராத், பிகார், மேற்குவங்கம் என்று தேர்வுசெய்து கட்ஜு விமர்சிக்கிறார். இதன் மூலம் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றபின் தனக்கு பதவி தந்தவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார்.

தனது அரசியல்கருத்துகளை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இப்போது வகிக்கும்பதவி அதற்கு ஏற்புடை யதல்ல. எனவே அவர் பதவியிலிருந்து விலகி விட்டு நேரடியாக அரசியலில் ஈடுடலாம் என ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...