பலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டது என் பா, ஜ,,கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பாஜக.வின் இரண்டு நாள் தேசிய செயற் குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது . இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில்,
ஒருதேசமாக இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி சொல்லிவருகிறார். ஆனால் உண்மை என்னவெனில் பலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டது. இந்திய பெருங் கடலில் அமைந்துள்ள மிகசிறிய நாடான மாலத் தீவு நமக்கு சவால்விடுகிறது.
இந்திய ராணுவவீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம்வெட்டி எடுத்து செல்கிறது. அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறை வேற்றுகிறது. இவை எல்லாம் நடந்தபிறகும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக உள்ளார் .
முன்பு போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய குவாத்ரோச்சி நாட்டைவிட்டு தப்பினார். இப்போது இத்தாலிய கடற் படை வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தவறான உத்தரவாதம் தந்து இந்தியாவில் இருந்து தப்பிசென்று விட்டனர். ஐ.மு., கூட்டணி அரசு இந்தியாவின் தலையை நிமிரசெய்துள்ளதா அல்லது தலையை குனியவைத்துள்ளதா என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள்.
இந்த அரசு உறுதியானமுடிவு எடுக்காததால் இந்தியாவுக்கு வரவேண்டிய ரூ. 7 லட்சம்கோடி அன்னியமுதலீடு இன்னும் வந்து சேரவில்லை. முடிவெடுக்காமை என்பது ஐ.மு., கூட்டணி அரசின் சுபாவமாக உள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளே அவ்வப் போது காங்கிரசுடன் முறைத்து கொள்கின்றன என கூறினார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.